கொடநாடு பறந்த ஜெயலலிதா.. ஹாங்காங்குக்குக் கிளம்பிய மு.க.ஸ்டாலின்
சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தோடு ஹாங்காங் பறந்துள்ளார்.
லோக்சபா தேர்தலுக்காக சூடு பறக்க தமிழகம் முழுவதும் சுற்றி வந்த தலைவர்கள் தற்போது ஆளாளுக்கு ஒரு பக்கமாக கிளம்பிப் போய்க் கொண்டுள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதா இன்று கொடநாடு எஸ்டேட்டுக்குக் கிளம்பிப் போய் விட்டார். ஆனால் அவருக்கு முன்பாக நேற்று நள்ளிரவே ஹாங்காங் கிளம்பிப் போய் விட்டார் ஸ்டாலின்.

சரிக்குச் சரி பிரசாரம்
லோக்சபா தேர்தலின்போது முதல்வர் ஜெயலலிதாவுக்கு சரிக்குச் சரியாக பிரசாரம் செய்தவர் ஸ்டாலின்.

செய்வீர்களா.. செஞ்சீங்களா
முதல்வர் ஜெயலலிதா தனது பிரசாரத்தின்போது செய்வீர்களா என்று கேட்கப் போகே அதையே பிடித்துக் கொண்டு நீங்க சொன்னதையெல்லாம் செஞ்சீங்களா என்று கேட்டுக் கேட்டே பிரசாரத்தை ஒரு வழியாக முடித்தார் ஸ்டாலின்.

ஹாங்காங் பயணம்
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் தனது மனைவி துர்கா, மருமகள், பேரன் பேத்திகள் என ஏழு பேருடன் ஹாங்காங் புறப்பட்டுச் சென்றார் ஸ்டாலின்.

வெற்றி வாய்ப்பு பிரகாசம்
ஹாங்காங் புறப்படுவதற்கு முன்பு தன்னை விமான நிலையத்தில் சந்தித்த செய்தியாளர்களிடம் திமுகவின் வெற்றி நல்ல பிரகாசமாக இருக்கிறது. 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும் என்றார் ஸ்டாலின்

தயாளு அம்மாள்
2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தயாளு அம்மாள் பெயர் சேர்த்தது குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் அதுகுறித்து நீதிபதியிடம்தான் கேட்க வேண்டும் என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications