கருணாநிதி ஆணையிட்டதால் அப்பல்லோ வந்தேன் - ஸ்டாலின்
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உத்தரவின் பேரில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து கேட்டறிந்ததாத எதிர்க் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக திமுக பொருளாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று இரவு 7.10 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். அவருடன் துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோரும் வந்தனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ஆம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 16 நாட்களாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மருத்துவ குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக திமுக பொருளாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். அவருடன் துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோரும் வந்தனர்.
பின்னர் மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், ஓரிரு நாட்களில் முதல்வர் நலம் பெற்று வீடு திரும்புவார் என்று அறிக்கை வந்த நிலையில், மேலும் பல நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று தற்போது அறிக்கை வந்துள்ள நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் அறிவுறுத்தலின் படி மருத்துவமனைக்கு வந்தேன்.
அமைச்சர்கள், மருத்துவர்களை நேரில் சந்தித்து விசாரித்து வரவேண்டும் என்று கருணாநிதி ஆணையிட்டதால் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோரிடம் முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரித்தேன். மருத்துவர்களிடமும் விசாரித்தேன். முதல்வர் நலம் பெற்று வருவதாக அவர்கள் கூறினர். முதல்வர் நலம் பெற்று இல்லம் திரும்பி அவரது பணியை தொடரவேண்டும் என்று எனது சார்பாகவும், திமுக சார்பாகவும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications