ஊழல் புகார்களை மறைக்கவே அமைச்சர்கள் மாற்றம்: ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஊழல் புகார்களை மறைக்கவே தமிழக அமைச்சர்களை ஜெயலலிதா மாற்றி வருவதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் கடந்த 22-ம் தேதி முதல் நேர்காணல் நடைபெற்று வருகிறது. மார்ச் 7-ம் தேதி வரை நேர்காணல் நடைபெறவுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் நேர் காணல் நடத்தி வருகின்றனர்.

 stalin meets press

இந்நிலையில் 8 வது நாளான நேற்று தஞ்சை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது. இதனிடையே நேர்காணலுக்கு பின்னர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் கூறுகையில், இதுவரை 165 தொகுதிகளில் 3 ஆயிரத்து 245 பேரிடம் நேர் காணல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அப்போது தமிழக அமைச்சர்கள் மாற்றம் தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் நடக்கும் பெரிய தவறுகளை மறைப்பதற்காக அடிக்கடி அமைச்சர்களை ஜெயலலிதா மாற்றி வருகிறார் என்று ஸ்டாலின் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+