காவிரி விவகாரம்.. மத்திய அரசுக்கு மீண்டும் அவகாசம் அளித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.. ஸ்டாலின்
காவிரி விவகாரம்.. மத்திய அரசுக்கு மீண்டும் அவகாசம் அளித்திருப்பது அதிர்ச்சி: ஸ்டாலின்
சென்னை: காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் அவகாசம் அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரத்தில் வரைவு செயல்திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு அவகாசம் அளித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை தமிழக விவசாயிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் காவிரி பிரச்னையில் நீதி வழங்குவதில் ஏற்படும் தாமதத்தால் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை குறைந்துவிட்டது.

நீரும் தடைபட்டுள்ளது
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் வாய்மொழி உத்தரவுப்படி தமிழகத்துக்கு நீர் கிடைக்கவில்லை காவிரி மேலாண்மை வாரியம் அமையாததால் மாதந்தோறும் வரவேண்டிய நீரும் தடைபட்டு உள்ளது.

நிதி வழங்குவதில் தாமதம்
கர்நாடகம் 4 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு தருமாறு மத்திய அரசும் அறிவுறுத்தவில்லை. கர்நாடக தேர்தலில் பாஜகவின் லாபத்திற்காக தமிழகத்தின் உரிமையில் நீதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அதிர்ச்சியளிக்கிறது
காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் அவகாசம் அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு அவகாசம் அளிக்கிறது. நீதிமன்றம் அவகாசம் தந்தது அரசியலமைப்பு சட்டத்துக்கு ஆரோக்கியமானதல்ல.

அரசு துரோகம் செய்துவிட்டது
தற்போதைய நிலை நீதித்துறை வரலாற்றில் நிச்சயம் இடம் பெற்றிருக்க கூடாது. காவிரி விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்தே பாஜக அரசுக்கு துணை போவதின் மூலம் அதிமுக அரசு துரோகம் செய்துவிட்டது. இவ்வாறு ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications