காவிரி விவகாரம்.. மத்திய அரசுக்கு மீண்டும் அவகாசம் அளித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.. ஸ்டாலின்
காவிரி விவகாரம்.. மத்திய அரசுக்கு மீண்டும் அவகாசம் அளித்திருப்பது அதிர்ச்சி: ஸ்டாலின்
சென்னை: காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் அவகாசம் அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரத்தில் வரைவு செயல்திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு அவகாசம் அளித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை தமிழக விவசாயிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் காவிரி பிரச்னையில் நீதி வழங்குவதில் ஏற்படும் தாமதத்தால் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை குறைந்துவிட்டது.

நீரும் தடைபட்டுள்ளது
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் வாய்மொழி உத்தரவுப்படி தமிழகத்துக்கு நீர் கிடைக்கவில்லை காவிரி மேலாண்மை வாரியம் அமையாததால் மாதந்தோறும் வரவேண்டிய நீரும் தடைபட்டு உள்ளது.

நிதி வழங்குவதில் தாமதம்
கர்நாடகம் 4 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு தருமாறு மத்திய அரசும் அறிவுறுத்தவில்லை. கர்நாடக தேர்தலில் பாஜகவின் லாபத்திற்காக தமிழகத்தின் உரிமையில் நீதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அதிர்ச்சியளிக்கிறது
காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் அவகாசம் அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு அவகாசம் அளிக்கிறது. நீதிமன்றம் அவகாசம் தந்தது அரசியலமைப்பு சட்டத்துக்கு ஆரோக்கியமானதல்ல.

அரசு துரோகம் செய்துவிட்டது
தற்போதைய நிலை நீதித்துறை வரலாற்றில் நிச்சயம் இடம் பெற்றிருக்க கூடாது. காவிரி விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்தே பாஜக அரசுக்கு துணை போவதின் மூலம் அதிமுக அரசு துரோகம் செய்துவிட்டது. இவ்வாறு ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications