இப்போதும் கூட கொடநாட்டை விட்டு ஜெ. இறங்கவே இல்லையே... ஸ்டாலின் கடும் தாக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் குண்டுவெடிப்பு நடந்த பதட்டமான சூழ்நிலையிலும் முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டை விட்டு சென்னைக்கு வராமல் இருப்பது கண்டனத்துக்குரியதாகும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்களை இன்று ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களிடம் உடல் நலமும் விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சென்னை ரயில் இரட்டை குண்டுவெடிப்பிற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும். முன்னெச்சரிக்கை விடுத்தும் தடுப்பு நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தவறிவிட்டது.
இந்த பதட்டமான சூழ்நிலையிலும் முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டில் தங்கியிருப்பது கண்டனத்துக்குரியது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications