4 ஆண்டு ஆட்சியின் குறைகளை மறைக்கவே “அம்மா ஏமாற்று மையம்” - சாடும் ஸ்டாலின்!
சென்னை: சென்னை பெருவெள்ளத்தின்போது நேர்ந்த செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் திறப்பு விவகாரத்தை மறைக்கவே அம்மா அழைப்பு மையம் என்ற புதிய திட்டத்தை ஜெயலலிதா தொடங்கியிருக்கிறார் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த 4 ஆண்டுகளாக மக்களின் குறைகளை கேட்காமல் ஆட்சி முடிவும் தருவாயில் இதுபோன்ற அழைப்பை மையங்களை ஏற்படுத்துவது மக்களை ஏமாற்றும் செயல். 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றாமல் தற்போது அதில் ஒரு பூஜ்ஜியத்தை சேர்த்து 1100 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்ற புதிய திட்டம் மக்களை ஏமாற்றும் செயல்.

தமிழ்நாடு முழுவதும் இருந்து புகார் தெரிவிக்கக் கூடிய வகையில் அந்த எண் கொடுக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான புகார்கள் நிச்சயமாக வரும். வரும் தொலைபேசி அழைப்புகளை பெறுவதற்கு லட்சக்கணக்கானோரை நியமிக்க வேண்டும். நடவடிக்கை எடுப்பதற்கும் நியமிக்க வேண்டும். ஆகவே இது காதில் பூ சுற்றுகிற வேலை. நான்கரை ஆண்டுகளாக மக்களின் குறைகளை கேட்காமல் திடீரென்று தேர்தல் வரக்கூடிய சூழ்நிலையில் இந்த செயல் மக்களை ஏமாற்றக் கூடிய நாடகம்.
ஏற்கனவே செம்பரம்பாக்கம் ஏரியை அறிவிப்பு இல்லாமல் திறந்துவிட்டதால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. உடைமைகள் இழக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் சென்னையே மாறிப்போனது. அதற்கு ஒரு நீதி விசாரணை வையுங்கள் என்று சொல்லுகிறோம். அதையெல்லாம் மூடி மறைப்பதற்காக, மக்களை திசை திருப்புவதற்காக இதுபோன்ற திட்டங்களை அறிவிக்கிறார்.
சட்டப்பேரவை இன்று கூடுகின்ற நிலையில், லட்சக் கணக்கான ரூபாய் செலவில் நாளேடுகளில் விளம்பரம் செய்து, புதிய திட்டத்தை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்திருப்பது வேடிக்கையாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications