மாரியம்மன் சாமி எனக்கு ரொம்ப பிடிக்கும்… துர்கா ஸ்டாலின்
நாமக்கல்: எனக்கு பிடித்த இஸ்ட தெய்வம் மாரியம்மன் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் மனைவி துர்கா கூறியுள்ளார்.
குடும்பத்தில் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, கோவிலுக்கு சென்று வழிபாடு செய்கிறேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
நாமக்கலுக்கு பிரசாரம் செய்ய வந்த ஸ்டாலினுடன் வந்திருந்த அவரது மனைவி துர்கா, நாமக்கல் நாமகிரி தாயார், நரசிம்மர், ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிபட்டார். பின், ஆஞ்சநேயர் கோவிலில் அறநிலையத்துறை அலுவலகத்தில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது

கோவில் கோவிலாகச் செல்வது ஏன்?
பகுத்தறிவு குடும்பமாக இருந்தாலும் சாமி வழிபாடு செய்வதை, எங்கள் குடும்பத்தில், எவரும் தடுப்பதில்லை.
கணவருடன் பிரசாரம்
கணவர் ஸ்டாலின் பிரசாரம் செல்லும் போது நானும் பெரும்பாலான இடங்களுக்குச் செல்வேன்.
கணவரிடம் அனுமதி
பிரசாரம் செல்லும் இடங்களில் உள்ள பிரபல கோவில்களுக்கு நான் செல்வதை, அவர்கள் எப்போதும் தடை செய்ததில்லை.
நலமாக இருக்கணும்
குடும்பத்தில் எல்லாரும் நலமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, என் வழிபாடு. எல்லாருக்கும் சேர்த்துதான் சாமி கும்பிட்டேன்.
இஷ்ட தெய்வம்
மாரியம்மன் சாமியை எனக்கு பிடிக்கும்.
நாமக்கல் கோவில்
நாமக்கல் நகரில் உள்ள நரசிம்மர், நாமகிரி தாயார், ஆஞ்சநேயர் சுவாமிகளை, ஒவ்வொரு முறை நாமக்கல் வரும்போதும், வழிபாடு செய்து விட்டுச் செல்வேன்.
எனக்கு போட்டோ குடுங்களேன்
நான் எந்த ஊர் கோவிலுக்கு சென்றாலும், போட்டோ எடுத்து பத்திரிகையில் போடுறீங்க; ஆனா, எனக்கு ஒரு போட்டோ கூட பிரின்ட் போட்டு தரமாட்டீங்கிறீங்க," என்று செய்தியாளரிடம் கேட்டார் துர்கா ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications