வாழ்நாளில் விபத்தே ஏற்படுத்தாத ஓட்டுநருக்கு தபால் தலை கவுரவம்
திண்டுக்கல்: திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசாங்க ஓட்டுநர் ஒருவர் தன்னுடைய வாழ்நாளில் ஒருமுறை கூட விபத்தை ஏற்படுத்தாத காரணத்தால் அவருக்கு தபால் தலை வெளியிட்டு கவுரவப்படுத்த உள்ளது மாவட்ட நிர்வாகம்.
திண்டுக்கல் கிழக்கு மாரம்பாடியை சேர்ந்தவர் குழந்தைசாமி. திண்டுக்கல் சமூகநலத்துறை அலுவலகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 1981 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர் வரும் 30 ஆம் தேதி ஓய்வு பெறுகிறார்.
33 ஆண்டுகளாக இவர் விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டியுள்ளார். இதனால் அவரை கவுரவிக்கும் வகையில் சமூகநலத்துறை ஊழியர்கள் அவரது புகைப்படத்துடன் கூடிய தபால்தலையை வெளியிட ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த தபால் தலையை அவர் ஓய்வுபெறும் 30 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் வெளியிட்டு கவுரவப்படுத்துகிறார். இது தன்னுடைய வாழ்நாளில் பெற்றுள்ள பெரும் கவுரவம் என்று கூறியுள்ளார் குழந்தைச்சாமி.












Click it and Unblock the Notifications