வாழ்நாளில் விபத்தே ஏற்படுத்தாத ஓட்டுநருக்கு தபால் தலை கவுரவம்
திண்டுக்கல்: திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசாங்க ஓட்டுநர் ஒருவர் தன்னுடைய வாழ்நாளில் ஒருமுறை கூட விபத்தை ஏற்படுத்தாத காரணத்தால் அவருக்கு தபால் தலை வெளியிட்டு கவுரவப்படுத்த உள்ளது மாவட்ட நிர்வாகம்.
திண்டுக்கல் கிழக்கு மாரம்பாடியை சேர்ந்தவர் குழந்தைசாமி. திண்டுக்கல் சமூகநலத்துறை அலுவலகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 1981 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர் வரும் 30 ஆம் தேதி ஓய்வு பெறுகிறார்.
33 ஆண்டுகளாக இவர் விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டியுள்ளார். இதனால் அவரை கவுரவிக்கும் வகையில் சமூகநலத்துறை ஊழியர்கள் அவரது புகைப்படத்துடன் கூடிய தபால்தலையை வெளியிட ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த தபால் தலையை அவர் ஓய்வுபெறும் 30 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் வெளியிட்டு கவுரவப்படுத்துகிறார். இது தன்னுடைய வாழ்நாளில் பெற்றுள்ள பெரும் கவுரவம் என்று கூறியுள்ளார் குழந்தைச்சாமி.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications