6 மாதத்திற்கு பின் அதிமுக தலைமை அலுவலகம் சென்றார் ஓபிஎஸ்.. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
இரு அணிகள் இணைப்பிற்காக அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்குப் புறப்பட்டுவிட்டதாக ஓபிஎஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 6 மாதத்திற்குப் பின் ஓபிஎஸ் கட்சி அலுவலகம் சென்றுள்ளார்.
Recommended Video

சென்னை: இரு அணிகள் இணையும் தருணம் கனிந்துவிட்டது. தான் அதிமுக தலைமை அலுவலகத்திற்குப் புறப்படுகிறேன் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து 6 மாதத்திற்குப் பின் அவர் கட்சி அலுவலகம் சென்றுள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர், அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுகள் ஏற்பட்டன. நீண்ட இழுபறி பேச்சுக்கு பின்னர் சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்துவிட்டு ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமையே இரு அணிகளும் சேரும் என்று எதிர்பார்த்த நிலையில், இன்று இணைப்பு நடந்துவிடும் என்றும், அதனைத் தொடர்ந்து புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் என்றும் தகவல்கள் வெளியாகி தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இழுபறி
இந்நிலையில் அணிகள் இணைய வேண்டுமானால், பொதுச் செயலாளராக இருக்கும் சசிகலாவை நீக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு உறுதியாக நின்றது. இதனால் இணைப்பில் இழுபறி ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை
இந்நிலையில், அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி, எம்பி வைத்திலிங்கம் ஆகியோர் ஓபிஎஸ்ஸை அவரது வீட்டில் சந்தித்து பேசினர். இதில் சுமூக முடிவு எட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
|
டுவிட்டர் பதிவு
இதனையடுத்து, ஓபிஎஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிமுக தலைமை அலுவலகத்திற்குப் புறப்படுகிறேன் என்று பதிவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர், 6 மாதத்திற்குப் பின் கட்சி அலுவலகத்திற்கு இன்று சென்றுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 5ம் தேதிதான் அவர் கடைசியாக அதிமுக அலுவலகத்திற்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மரியாதை
இதனைத் தொடர்ந்து, இணைப்பு இன்று முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் முன்னாள் மற்றும் இன்னாள் முதல்வர்கள் செல்ல உள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications