சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில் மர்மநபர்கள் கல்வீசித் தாக்குதல் - போலீஸ் விசாரணை
சென்னை: சென்னை கோயம்பேட்டியில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் கல் வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், அங்கிருந்த கண்ணாடிகள் உடைந்தன.
தேமுதிக தலைமை அலுவலகம் சென்னை கோயம்பேட்டியில் இயங்கி வருகிறது. இங்கு இன்று காலை அடையாளம் தெரியாத மர்மநபர்கள் சிலர் கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், அலுவலக் கட்டிடத்தில் இருந்த கண்ணாடி ஜன்னல்கள் நொறுங்கின.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே, மக்கள் நலக்கூட்டணியுடன் சட்டசபைத் தேர்தலில் தேமுதிக கூட்டணி வைத்தது தொடர்பாக அக்கட்சித் தலைவர்களிடையே அதிருப்தி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, தேமுதிக, திமுகவுடன் கூட்டணி வைக்காததற்கு எதிர்ப்புத் தெரிவித்து சந்திரகுமார் உள்ளிட்ட சில தலைவர்கள் கட்சியில் இருந்து வெளியேறினர். பின்னர் அவர்கள் தனிக்கட்சி தொடங்கி திமுகவுடன் இணைந்தனர்.
இந்த சூழ்நிலையில் தேமுதிக அலுவலகம் மீது மர்மநபர்கள் நடத்திய கல்வீச்சு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications