ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது கல்வீசி தாக்குதல்- கிரீன்வேஸ் சாலையில் பதற்றம்
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வீட்டின் மீது சசிகலா தரப்பு ஆதரவாளர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வீட்டின் மீது சசிகலா தரப்பு ஆதரவாளர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமைச்சர் சிவி சண்முகத்தின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.
இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளன. அசாதாரண சூழல் நிலவுவதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஓபீஎஸ் வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

மண்டை உடைந்தது
ஓபிஎஸ் வீடு வழியே காரில் சென்ற சிலர் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவரது மண்டை உடைந்து ரத்தம் வழிந்தது. அதேபோல் போலீசார் ஒருவரது மண்டையும் உடைந்தது. இதனால் கிரீன்வேஸ் சாலையில் பதற்றம் நிலவியது.












Click it and Unblock the Notifications