Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குடிநீர் பஞ்சத்தைப் போக்க கல்குவாரி நீர்.. குடிக்க உகந்ததா.. கிங் இன்டியூட்டில் நடக்கிறது ஆய்வு

சென்னையில் உருவாகியுள்ள குடிநீர் பஞ்சத்தைப் போக்க கல்குவாரி நீரை பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. கல்குவாரியில் இருந்து எடுக்கப்படும் நீர் குடிக்க ஏற்றதா என ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: குடிநீர் பஞ்சத்தால் சென்னை மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த கோடை காலத்தில் குடிநீர் பஞ்சத்தை சமாளிக்க கல்குவாரியில் இருந்து எடுக்கப்படும் நீரை குடிநீராக பயன்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என எதுவும் தமிழகத்தின் நீருக்கு கைகொடுக்கவில்லை. விவசாயம் பொய்த்துப் போய் விவசாயிகள் செத்து மடிந்து கொண்டிருக்கின்றனர்.

Stone quarries water to Chennaities

மறுபுறம், குடிநீருக்கான நீர் இல்லாமல் தமிழகம் முழுவதும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கலர் கலர் குடங்களை சுமந்து பெண்கள் சாலைகளில் அலைந்து திரிந்து தண்ணீர் எடுத்து வருகின்றனர்.

குடிநீர் ஆதாரம்..

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், புழல் ஆகிய ஏரிகள்தான் தீர்த்து வைக்கும். இது தவிர வீராணம் ஏரியில் இருந்தும் சென்னைக்கு தண்ணீர் கிடைக்கும், நெம்மேலியில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து சென்னைக்கு குடிநீர் கிடைத்து வருகிறது.

வற்றி வரும் ஏரிகள்..

இந்நிலையில், கொளுத்தி வரும் வெயிலுக்கு ஏரிகளில் தண்ணீர் கடகடவென வற்றி வருகிறது. சென்னைக்கு தண்ணீர் வழங்க 1.678 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. இந்த தண்ணீரை கொண்டு சென்னையில் ஒரு மாதம் கூட குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாது.

கல்குவாரி நீர்

இந்நிலையில் கல்குவாரி குட்டைகளில் தேங்கி உள்ள நீரை சென்னை மக்களுக்கு வழங்க அரசு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதாவது கல்குவாரியில் தேங்கி இருக்கும் நீரை சுத்திகரித்து பின்னர் குடிநீராக விநியோகிக்கப்படும்.

குடிக்க முடியுமா?

கல்குவாரியில் தேங்கி இருக்கும் நீரை குடிநீருக்கு பயன்படுத்த முடியுமா என்பது குறித்து சோதனை நடத்த திட்டமிடப்பட்டது. இதுகுறித்து சென்னைக் குடிநீர் வாரிய பொறியாளர்களுக்கு குடிநீர் வாரிய இயக்குனர் அருண்ராய் உத்தரவிட்டுள்ளார்.

ஆய்வு

இதையடுத்து கல்குவாரிகளில் தேங்கி இருக்கும் நீரை குடிநீருக்கு பயன்படுத்தலாமா என்பது குறித்த ஆய்வுகளை சென்னை குடிநீர் வாரிய பொறியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கல்குவாரிகளில் தேங்கியுள்ள நீரின் அளவு குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எத்தனை கல்குவாரிகளில் நீர்?

சென்னையை அடுத்துள்ள மாங்காட்டில் 22 கல்குவாரிகளும், திருநீர்மலையில் 3 கல்குவாரிகளும், பம்மலில் 3 கல்குவாரிகளும், நன்மங்கலத்தில் 3 கல்குவாரிகளும் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த குவாரிகளில் உள்ள நீரின் தரம் மற்றும் அளவு குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகின்றன.

கிங் இன்ஸ்டியூட்டில்..

கல்குவாரியில் இருந்து எடுக்கப்படும் நீரின் தரம் பற்றிய ஆய்வை சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டியூட் மற்றும் அண்ணா பல்கலைக்கழக சுற்றுச்சூழல் மற்றும் புவி அமைப்பியல் துறை ஆய்வு செய்து வருகிறது. மேலும் நீரின் இருப்பு குறித்து எம்.ஜி.ஆர். பொறியியல் கல்லூரி, சிவில் பொறியியல் துறையும் ஆய்வு செய்து வருகின்றது.

என்ன நடக்கப் போகுதோ...

கல்குவாரிகளிலுள்ள நீரை பயன்படுத்தலாமா கூடாதா என்பது ஆய்வு முடிந்த உடன் தெரிய வரும். நீரை பயன்படுத்தலாம் என்றால் குவாரி நீரை சென்னை மக்களுக்கு அரசு விநியோகம் செய்யும். ஆனால் அந்த நீரை பருகிய பின்னர்தான் சென்னை மக்களுக்கு என்ன விதமான தீங்கை விளைவிக்கும் என்பது தெரிய வரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+