கருணாநிதியின் கருப்பு கண்ணாடிக்கு பின்னால் இருந்த வேதனை வரலாறு தெரியுமா?
கருணாநிதியின் கருப்பு கண்ணாடியின் பின்னால் பெரும் வலி நிறைந்த வரலாறு உள்ளது. இந்த வலியையும் பொறுத்துக்கொண்டு இத்தனை ஆண்டு காலம் பயணித்தவர்தான்தான் கலைஞர்.
சென்னை: எம்ஜிஆர் என்றதும் எப்படி தொப்பியும், கருப்பு கண்ணாடியும், சட்டென நினைவுக்கு வருமோ அப்படி, கலைஞர் கருணாநிதி என்றதும் அனைத்து மக்களுக்குமே நினைவுக்கு வருவது அவரின் கருப்பு கண்ணாடிதான். பிற்காலத்தில் இதில், மஞ்சள் துண்டும் சேர்ந்து கொண்டது.
ஆனால், இந்த கருப்பு கண்ணாடி ஏதோ அடையாளத்திற்காகவோ, ஸ்டைலுக்காகவோ போடப்பட்டது கிடையாது.
அந்த கருப்பு கண்ணாடியின் பின்னால் பெரும் வலி நிறைந்த வரலாறு உள்ளது. இந்த வலியையும் பொறுத்துக்கொண்டு இத்தனை ஆண்டு காலம் பயணித்தவர்தான்தான் கருணாநிதி.

கருப்பு கண்ணாடி பின்னணி
அந்த கருப்பு கண்ணாடியின் பின்னணியில் உள்ள கருப்பு சரித்திரம் இதுதான். 1953ம் ஆண்டு பரமக்குடியில் கருணாநிதிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அதில் பங்கேற்றுக்கொண்டு, அவர் காரில் திருச்சி சென்று கொண்டிருந்தார். அப்போதுதான் அந்த விபரீதம் நடந்தது. திருப்பத்தூர் பயணிகள் விடுதி அருகில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது கார்.

கருணாநிதி கார் விபத்து
கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர மைல் கல்லில் மோதி, மைல் கல் உடைந்து, பயணிகள் விடுதியின் முன்புற வாயில் கதவில் போய் மோதி நின்றது அந்த கார். அந்த அளவுக்கு மோசமான ஒரு விபத்து அது. காருக்குள் இருந்த கருணாநிதியும், அவர் தோழமைகளும் உருட்டி தள்ளப்பட்டனர்.
நல்லவேளையாக கலைஞரின் நண்பர்களுக்கு காயம் இல்லை. ஆனால் கருணாநிதியின் மூக்கு உடைபட்டு ரத்தம் கொட்டியது.

கருணாநிதி கண் வலி
கருணாநிதியின் முகமே வீங்கியது. இடது கண்ணில் கடுமையான வலி ஏற்பட்டதை அவர் உணர்ந்தார். இதையடுத்து, கண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கருணாநிதிக்கு, 12 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. ஒருவழியாக சமாளித்து பணிகளையாற்ற துவங்கிய நிலையில், 1967ம் ஆண்டு செப்டம்பரில் மீண்டும் ஒரு கார் விபத்தில் சிக்கினார் கருணாநிதி.

அமெரிக்காவில் அறுவை சிகிச்சை
இந்த விபத்து காரணமாக, கண்ணில் ஏற்கனவே இருந்து வந்த வலி மேலும் அதிகமாயிற்று. 1971ம் ஆண்டில் அமெரிக்கா சென்றார் கருணாநிதி. பால்டிமோர் நகரில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்தது. அதனால் கண் வலி சற்று குறைந்த போதிலும், அவ்வப்போது வலி தொடரவே செய்தது. அந்த வலி அவரை கடைசி காலம் வரை வேதனைப்படுத்திக் கொண்டே இருந்தது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications