திருமண ஆசை காட்டி நர்சை காதலித்து ஏமாற்றிய கல்லூரி மாணவர் கைது

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் அருகே நர்சை திருமணம் செய்து கொள்வதாக கூறி, காதலித்து ஏமாற்றிய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நாயகம்ப்பட்டியை சேர்ந்தவர் பிரியதர்ஷினி (27). இவர் நர்சாக பணிப்புரிந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (22) என்பவர் தனியார் கல்லூரில் படித்து வருகிறார்.

student arrested in salem

பிரியதர்ஷினிக்கும், மணிகண்டனுக்கும் இடையே பழக்கம் ஏற்ப்பட்டுள்ளது. அந்தப் பழக்கம் பின்னர் காதலாக மலர்ந்தது. இதனிடையே பிரியதர்ஷினியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டிய மணிகண்டன், அவருடன் பலமுறை உறவு வைத்து கொண்டாதாக கூறப்படுகிறது. இதனால் பிரியதர்ஷினி கர்ப்பம் அடைந்தார்.

இதனையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மணிகண்டனிடம் பிரியதர்ஷினி கேட்டுள்ளார். ஆனால் கருவை கலைத்துவிடுமாறு மணிகண்டன் கூறியதை அடுத்து பிரியதர்ஷினி கருவை கலைத்துள்ளார். ஆனால், மணிகண்டன் திருமணம் செய்யாமல் ஏமாற்றியதுடன், மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மணிகண்டன் மீது பிரியதர்ஷினி ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை அடுத்து மணிகண்டன் மீது பாலியல் வன்கொடுமை , ஏமாற்றுதல், கருகலைப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+