தேனி அருகே 12ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை: பெற்றோர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம்
தேனி அருகே 12ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி: தேனி மாவட்டம் கூடலூரில் 12-ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் கூடலூரில் 12-ம் வகுப்பு படித்து வந்த பிரகாஷ் என்ற மாணவர் வீட்டுக்கு வந்தவுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்த மாணவரின் பெற்றோர், தங்கள் மகனின் சாவில் மர்மம் உள்ளதாக புகார் கூறினர். மேலும் மகனின் சாவுக்கான காரணம் தெரியும் வரை, உடலை வாங்கப் போவதில்லை என்றும் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications