சிதம்பரம் பல்கலை. விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை- போலீஸ் விசாரணை
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to Oneindia Tamil
கடலூர்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக விடுதியில் வேளாண் கல்லூரி முதலாமாண்டு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் ரோஸ் ஹாஸ்டலில் வேளாண் கல்லூரி முதலாமாண்டு படிக்கும் மாணவி நந்தினி தூக்கில் தொங்கினார். இதைப் பார்த்த சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்டது. திண்டிவனம் அருகே கூத்தப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தியின் மகள்தான் நந்தினி. ராக்கிங் காரணத்தால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1996-ம் ஆண்டு ராக்கிங் காரணமாக மாணவர் நாவரசு வெட்டி கூறு கூறாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications