மாணவி பலாத்காரம்: நெல்லை பாதிரியாருக்கு ஜன.9 வரை சிறை

தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி அருகே உள்ள கைலாசபுரத்தைச் சேர்ந்தவர், செல்வன் (வயது 34). இவர் நெல்லை பேட்டையில் உள்ள ஒரு தேவாலயத்தில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் பாதிரியாராக இருந்து வந்தார்.
அந்த ஆலயத்துக்கு, அந்த பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவி ஒருவர் வந்தார். ஆசைவார்த்தைகள் கூறி அந்த மாணவியை, பாதிரியார் செல்வன் பலாத்காரம் செய்துள்ளார். மாணவியை மிரட்டி பலமுறை உல்லாசம் அனுபவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மாணவி கர்ப்பம் அடைந்தார்.
5 மாத கர்ப்பிணியாக இருந்த போது, ஒரு பெண் டாக்டரின் மூலம் மாணவிக்கு அறுவை சிகிச்சை செய்து சிசு அகற்றப்பட்டது. இந்த விவகாரம் வெளியே தெரியத்தொடங்கியதும் பாதிரியார் செல்வன் தலைமறைவானார்.
நெல்லை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாதிரியாரை தேடி வந்தனர். அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட சிசுவானது, பேட்டையில் ஒதுக்குப்புறமான பெட்டைகுளம் பகுதியில் புதைக்கப்பட்டது. அதை தோண்டி சோதனை மேற்கொள்ளப்பட்டது. கருவிலேயே அகற்றப்பட்டது ஆண் குழந்தை என தெரியவந்தது.
சிசுவின் சடலத்திலிருந்து மருத்துவக் குழுவினர் மாதிரிகளை எடுத்த பின்னர், மீண்டும் அதே இடத்தில் சடலம் புதைக்கப்பட்டது.
இது தொடர்பாக திருநெல்வேலி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து பாதிரியார் செல்வின், மருத்துவர் மீனாட்சி ஆகியோரைத் தேடி வந்தனர்.
இந்தநிலையில், உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடுவர் கீதா முன்னிலையில் பாதிரியார் செல்வன் வெள்ளிக்கிழமை சரணடைந்தார். அவரை வியாழக்கிழமை வரை சிறைக் காவலில் அடைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி கீதா, 26-ஆம் தேதி திருநெல்வேலியில் உள்ள தொடர்புடைய நீதிமன்றத்தில் ஆஜராகவும் அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாதிரியார், நீதிமன்ற உத்தரவுப்படி, திருநெல்வேலி குற்றவியல் மாஜிஸ்திரேட் 5வது கோர்ட்டில் இன்று போலீசார் அவரை ஆஜர்படுத்தினர்.
பாதிரியார் செல்வத்தை விசாரித்த நீதிபதி இசக்கியப்பன் அவரை வருகிற ஜனவரி மாதம் 9 ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதை அடுத்து பாதிரியார் செல்வம் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பாதிரியார் செல்வனை காவலில் எடுத்து விசாரிக்க நெல்லை போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பாதிரியார் செல்வனை காண்பதற்கு ஏராளமானவர்கள் நீதிமன்ற வளாகத்தில் திரண்டு நின்று வேடிக்கை பார்த்தனர்.
பள்ளி மாணவியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட பாதிரியாரை கடந்த சில தினங்களுக்கு முன்னர் கத்தோலிக்க சபையில் இருந்து நீக்கி பிஷப் அறிக்கை வெளியிட்டார். இவ்வழக்கில் நீதி நிலைநாட்டப்படும். இதுதொடர்பாக நேர்மையான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு திருச்சபையின் தரப்பிலிருந்து தரப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications