ஸ்டெர்லைட் தொடங்கி அர்பன் நக்சல் வரை.. பல நாட்களாக தொடர்ந்து போராடி வந்த சோபியா!
Recommended Video

சென்னை: பாசிச பாஜக ஒழிக என்று கோஷமிட்ட மாணவி சோபியா ஏற்கனவே மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
.நேற்று தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசைக்கு எதிராக மாணவி சோபியா 'பாசிச பாஜக ஆட்சி ஒழிக'' என்று கோஷமிட்டனர். அவரின் இந்த கோஷம் தற்போது வைரல் ஆகியுள்ளது.
அவர் இட்ட ''பாசிச பாஜக ஆட்சி ஒழிக கோஷம்'' இணையத்தில் டிரெண்ட் ஆகியுள்ளது. சோபியா என்ற பெயரும் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இப்படித்தான்
சோபியா தற்போது திடீர் என்று தமிழசையை பார்த்தவுடன் பாஜக ஒழிக என்று கோஷமிடவில்லை. அவர் இதற்கு முன்பில் இருந்தே மத்திய பாஜக அரசுக்கும், மாநில அதிமுக அரசுக்கு எதிராக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்துள்ளார். அவர் டிவிட்டர் பக்கம் முழுக்க பாஜகவிற்கு எதிராக நிறைய டிவிட்டுகள் காணப்படுகிறது.
|
தூத்துக்குடி போராட்டம்
அவர் டிவிட்டர் பக்கத்தில் இருக்கும் முதல் டிவிட்டே, (பின் செய்து வைத்துள்ளார்) தூதுக்குடிட் போராட்டம் குறித்துதான். தூத்துக்குடி போராட்டம் பற்றியும், ஸ்டெர்லைட் போராட்டம் பற்றியும், வேதாந்தா குழுமம் தூத்துக்குடியில் என்ன செய்கிறது என்றும் விளக்கம் அளிக்கும் கட்டுரை ஒன்றை பகிர்ந்து வைத்துள்ளார். அதேபோல் தூத்துக்குடி தொடர்பாக நிறைய டிவிட்டுகளை செய்துள்ளார்.

செயற்பாட்டாளர்கள் கைது
அதேபோல் பிரதமர் மோடியை கொலை செய்ய திட்டமிட்டதாக, 60 வயது தாண்டிய ஒரு பெண் உட்பட 5 சமூக செயற்பட்டர்களை கைது செய்தது. தற்போது இவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள். பாஜக இவர்களை அர்பன் நக்சல் (நகர்ப்புற நக்சல்) என்று அழைக்கிறது. இவர்களின் விடுதலைக்காக தனது டிவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து இவர் டிவிட் செய்துள்ளார்.

கடைசியில் கைது
அதேபோல் திருமுருகன் காந்தியின் கைதுக்கு எதிராகவும் தனது டிவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து எழுதி வந்துள்ளார். மேலும் வளர்மதி கைது குறித்தும் தொடர்ந்து எழுதியுள்ளார். சமூக செயற்பட்டாளர் கைதுக்கு எதிராக பேசி வந்த சோபியா தற்போது போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்












Click it and Unblock the Notifications