பழசுக்கு புதுசு.. தேவகோட்டை பள்ளியில் மாணவர்களுக்கு ரூபாய் நோட்டு விளக்க கூட்டம்
தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் பழைய ரூபாய் நோட்டுக்களை எப்படி மாற்றுவது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
தேவகோட்டை: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் அரசு செல்லாது என்று அறிவித்த ரூபாய் நோட்டுக்களை மாற்றி புதிய நோட்டுக்களை பெறுவது எப்படி என்பது குறித்து மாணவர்களிடம் விளக்க கூட்டம் நடைபெற்றது.
பள்ளி மாணவர் விஜய் அனைவரையும் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கி புதிய ரூபாய் 500,1000 ...எப்படி பெறுவது என்பது குறித்து மாணவர்களுக்கு விளக்கி சொன்னதுடன் இது தொடர்பான முக்கிய தகவல்கள் அச்சிடப்பட்ட தகவல்கள் அடங்கிய நோட்டிசும் மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் பள்ளியின் சார்பாக வழங்கப்பட்டது.

பணம் மாற்றும் படிவம் வேண்டுவோர் பள்ளியில் வந்து பெற்று கொள்ளலாம் எனவும் எடுத்து சொல்லப்பட்டது. பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லும் என்கிற தகவலும், ஆனால் அதனை வங்கியில் தான் கொண்டு சென்று மாற்ற இயலும் என்கிற தகவலும் தெளிவாக பெற்றோர்களிடம் சென்று சொல்ல வேண்டும்.

வீட்டை சுற்றி உள்ள அனைவரிடமும் இது தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பன போன்ற தகவல்களை ஆசிரியர் ஸ்ரீதர் எடுத்து சொன்னார். நிறைவாக மாணவி அல்நிஸ்மா பேகம் நன்றி கூறினார்.

"அனைவரும் ஏதாவது ஒரு வகையில் விவசாயம் செய்யுங்கள்"
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற தேசிய கல்வி நாள் விழாவில் அனைவரும் ஏதாவது விவசாயம் செய்யுங்கள் என்று தனியார் விவசாயக் கல்லூரி டீன் பேபி ராணி பேசினார்.

விழாவிற்கு வந்தவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் வரவேற்றார். ஓய்வு பெற்ற நகராட்சி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். தனியார் விவாசய கல்லூரி டீன் பேபி ராணி தலைமை தாங்கி பேசுகையில், அனைத்து மாணவர்களும் சிறு வயது முதலே வீட்டை சுற்றிலும் சிறிய அளவிலாவது விவசாயம் செய்யுங்கள்.
இன்று பருவமழை பொய்த்து போனதாலும், பெருவாரியான நிலங்கள் விலை நிலங்களாக மாறி விட்டதாலும், கூட்டு குடும்பங்கள் குறைந்து விட்டதாலும் ,உழைப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாலும் விவசாயம் செய்வோர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. எனவே நீங்கள் உங்கள் பெற்றோரிடம் சொல்லி பசு மாடு வளர்த்தால் கூட அது விவசாயம்தான்.

ஏதாவது ஒரு வகையில் விவசாயம் செய்யுங்கள்.மாணவர்களாகிய நீங்கள் சிறு வயது முதலே அந்த பழக்கத்தை வளர்த்து கொள்ளுங்கள்.கிடைக்கும் அனைத்து தகவல்களையும் படித்து கொள்ளுங்கள். கல்விதான் உங்களுக்கு வாழ்க்கையில் கிடைத்துள்ள மிகபெரிய சொத்து.கல்வியோடு தொடர்பு படுத்தி இயற்கை விவசாயத்தை அதிக படுத்துங்கள் என்று பேசினார்.

மாணவர்கள் ஜீவா, காவியா, சின்னமாள், பரமேஸ்வரி, ரஞ்சித், தனலெட்சுமி, ராஜேஷ் ஆகியோர் விவசாயம் தொடர்பாக கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர். நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.
-
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..!












Click it and Unblock the Notifications