பழசுக்கு புதுசு.. தேவகோட்டை பள்ளியில் மாணவர்களுக்கு ரூபாய் நோட்டு விளக்க கூட்டம்
தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் பழைய ரூபாய் நோட்டுக்களை எப்படி மாற்றுவது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
தேவகோட்டை: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் அரசு செல்லாது என்று அறிவித்த ரூபாய் நோட்டுக்களை மாற்றி புதிய நோட்டுக்களை பெறுவது எப்படி என்பது குறித்து மாணவர்களிடம் விளக்க கூட்டம் நடைபெற்றது.
பள்ளி மாணவர் விஜய் அனைவரையும் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கி புதிய ரூபாய் 500,1000 ...எப்படி பெறுவது என்பது குறித்து மாணவர்களுக்கு விளக்கி சொன்னதுடன் இது தொடர்பான முக்கிய தகவல்கள் அச்சிடப்பட்ட தகவல்கள் அடங்கிய நோட்டிசும் மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் பள்ளியின் சார்பாக வழங்கப்பட்டது.

பணம் மாற்றும் படிவம் வேண்டுவோர் பள்ளியில் வந்து பெற்று கொள்ளலாம் எனவும் எடுத்து சொல்லப்பட்டது. பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லும் என்கிற தகவலும், ஆனால் அதனை வங்கியில் தான் கொண்டு சென்று மாற்ற இயலும் என்கிற தகவலும் தெளிவாக பெற்றோர்களிடம் சென்று சொல்ல வேண்டும்.

வீட்டை சுற்றி உள்ள அனைவரிடமும் இது தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பன போன்ற தகவல்களை ஆசிரியர் ஸ்ரீதர் எடுத்து சொன்னார். நிறைவாக மாணவி அல்நிஸ்மா பேகம் நன்றி கூறினார்.

"அனைவரும் ஏதாவது ஒரு வகையில் விவசாயம் செய்யுங்கள்"
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற தேசிய கல்வி நாள் விழாவில் அனைவரும் ஏதாவது விவசாயம் செய்யுங்கள் என்று தனியார் விவசாயக் கல்லூரி டீன் பேபி ராணி பேசினார்.

விழாவிற்கு வந்தவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் வரவேற்றார். ஓய்வு பெற்ற நகராட்சி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். தனியார் விவாசய கல்லூரி டீன் பேபி ராணி தலைமை தாங்கி பேசுகையில், அனைத்து மாணவர்களும் சிறு வயது முதலே வீட்டை சுற்றிலும் சிறிய அளவிலாவது விவசாயம் செய்யுங்கள்.
இன்று பருவமழை பொய்த்து போனதாலும், பெருவாரியான நிலங்கள் விலை நிலங்களாக மாறி விட்டதாலும், கூட்டு குடும்பங்கள் குறைந்து விட்டதாலும் ,உழைப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாலும் விவசாயம் செய்வோர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. எனவே நீங்கள் உங்கள் பெற்றோரிடம் சொல்லி பசு மாடு வளர்த்தால் கூட அது விவசாயம்தான்.

ஏதாவது ஒரு வகையில் விவசாயம் செய்யுங்கள்.மாணவர்களாகிய நீங்கள் சிறு வயது முதலே அந்த பழக்கத்தை வளர்த்து கொள்ளுங்கள்.கிடைக்கும் அனைத்து தகவல்களையும் படித்து கொள்ளுங்கள். கல்விதான் உங்களுக்கு வாழ்க்கையில் கிடைத்துள்ள மிகபெரிய சொத்து.கல்வியோடு தொடர்பு படுத்தி இயற்கை விவசாயத்தை அதிக படுத்துங்கள் என்று பேசினார்.

மாணவர்கள் ஜீவா, காவியா, சின்னமாள், பரமேஸ்வரி, ரஞ்சித், தனலெட்சுமி, ராஜேஷ் ஆகியோர் விவசாயம் தொடர்பாக கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர். நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications