மழை மன்னன்... புயல் புலி... லீவ் தெய்வம்... ரமணனை கொண்டாடும் மாணவர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்கள் ரமணனுக்கு கோயில் கட்டிக் கொண்டாடத குறை. ஏதோ ரமணனே திட்டமிட்டு வடகிழக்கு பருவ மழையைத் தூண்டிவிட்டது போல, அவருக்கு நன்றி கூறி மீம்ஸ் போட்டு பாலபிஷேகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். குட்டீஸ்களுக்கு மட்டுமல்ல... மழையால் விடுமுறை விடப்பட்டதோடு தேர்வுகளும் ஒத்திவைக்கப்படவே, கல்லூரி மாணவர்களுக்கும் கதாநாயகன் ரமணன்தான்.

மதியம் 12.30 ஆகிவிட்டாலே அது டிவியில் ரமணன் வரும் நேரம் என்பதை தெரிந்து கொண்டு டிவி சேனலை பார்க்க ஆரம்பித்து விட்டனர் மாணவர்கள். இன்னைக்கு ஸ்கூல் லீவாமே 'குலதெய்வம்' அருள்வாக்கு சொல்லிருச்சு என்று ரமணனை கொண்டாடுகிறார்கள். அந்த அளவிற்கு ரமணன், ஃபேவரைட் ஹீரோ ஆகிவிட்டார். அதனால்தான் மீம்ஸ் போட்டு கலக்குகின்றனர்.

வானிலை அறிக்கை கூறி தமிழக மக்களின் மனதை மகிழ்விக்கும் ரமணன் அனைத்து டிவி சேனல்களிலும் ஹீரோவாகி அரைமணி நேர எபிசோடை பல ஆண்டுகளாக தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

எத்தனையோ பேர் என்னைப் பார்த்தாலும் எங்க வீட்டில் என்னை டிவியில் பார்க்கவே மாட்டார்கள் என்று வருத்தப்படுகிறார் ரமணன். ஏன் அவருடைய பேட்டியை அவரே பார்க்க மாட்டாராம்.

பிடித்த நடிகை யார் தெரியுமா?

ரமணன் சாருக்கு பிடித்த நடிகை நடிகையர் திலகம் சாவித்திரியாம். அவருடைய குரலுக்கு இன்றைக்கு பலரும் ரசிகர்களாக இருக்கின்றனர். அது இயற்கையிலயே தனித்துவமாக எனக்கு அமைந்தது என்கிறார் ரமணன்.

இன்னும் 2 ஆண்டுதான்

இன்னும் 2 ஆண்டுதான்

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநராக பல ஆண்டுகாலம் டிவியில் தோன்றி வானிலை முன்னறிவிப்பு சொல்லும் ரமணன் இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டும்தான் பணியில் இருப்பாரம். அப்புறம் ரிட்டையர்மெண்ட்தான் என்கிறார்.

டாக்டர் ரமணன்

டாக்டர் ரமணன்

விவேகானந்த கல்லூரியில் இயற்பியல் படித்து அண்ணா யுனிவர்சிட்டியில் எம்.எஸ்.சி படித்து மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் டாக்டரேட் பட்டம் பெற்றிருக்கிறாராம் ரமணன்.

நான் ரொம்ப சாமான்யன்

எனக்கு மீம்ஸ் போட்டு பாராட்டுவது அவர்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது. நான் என்னுடைய வேலையை செய்கிறேன். நான் சாதாரண அரசாங்க ஊழியன். ரொம்ப சாமான்யன் என்கிறார் இந்த மழை மன்னன்.

இது சராசரி மழைதான்

இது வழக்கமாக பெய்யக் கூடிய வடகிழக்கு பருவ மழைதான். இதுக்கு முன்னாடி பல தடவை சென்னையில இவ்வளவு மழை

பெய்திருக்கிறது. சென்னையில மட்டும் 51 செ.மீட்டர் மழை பெய்து இருக்கிறது. மற்ற மாவட்டத்தை பொறுத்தவரை காஞ்சிபுரத்தில் அதிக அளவு மழை பெய்திருக்கிறது என்கிறார் சாதாரணமாக கூறிவிட்டு இன்றைய வானிலை அறிக்கைக்கு தயாராகிவிட்டார் ரமணன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+