வெள்ளையனே வெளியேறு இயக்க தினம்.. தியாகிகள் நினைவிடத்தில் மாணவர்கள் மரியாதை

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவு தினத்தையொட்டி மாணவர்கள் தியாகிகள் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

1942-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ந் தேதி கோவில்பட்டி அருகே கடலையூரில் வெயிலுகாத்த முதலியார் தலைமையில் நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டத்தில் கலந்து கொண்ட தியாகிகள் மீது ஆங்கிலேயே அரசு துப்பாக்கி சூடு நடத்தியதில் சங்கரலிங்க முதலியார் சம்பவ இடத்திலேயே பலியானார். மாடசாமி முதலியார், ராமசாமி முதலியார் ஆகியோர் குண்டடி பட்டு படுகாயம் அடைந்தனர்.

ஏராளமானோர் சிறையில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். காலஞ்சென்ற இந்த தியாகிகளின் தேசப்பற்றை போற்றும் விதமாக கோவில்பட்டி அருகே கடலையூரில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 74-வது ஆண்டு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. அங்குள்ள செங்குந்தூர் உயர்நிலைப்பபள்ளி மாணவ, மாணவிகள் தியாகிகளின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து கடலையூர் முக்கிய வீதிகளில் அவர்கள் ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலத்தில கோவில்பட்டி ஆர்டிஓ கண்ணபிரான், டிஎஸ்பி முருகவேல், கல்வி மாவட்ட அலுவலர் செல்லையா ஆகியோரும் பங்கேற்றனர். தியாகிகளின் வாழ்க்கையை இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைக்க அவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+