இந்து ஆன்மீக கண்காட்சியில் 1,008 ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பாதபூஜை!
சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் இந்து ஆன்மீக கண்காட்சியில் 1,008 ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பாதபூஜை செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியில் இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று, மாத்ரு - பித்ரு வந்தனம் - ஆச்சார்ய வந்தனம் என்ற தலைப்பில் 1,008 ஆசிரியர்கள் கவுரவிப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதற்காக ஆசிரியர்களுக்கு வேட்டி, நீல நிற சட்டை, தோளில் போடும் துண்டு மற்றும் ஆசிரியைகளுக்கு நீல நிறத்தில் புடவையும் வழங்கப்பட்டிருந்தது. இதனை அனைவரும் ஒரே மாதிரியாக அணிந்து விழா பந்தலில் அமரவைக்கப்பட்டு இருந்தனர்.

இவர்களுக்கு அமிர்தா, பத்மா ஷேசாத்திரி மற்றும் ராஜலட்சுமி பள்ளிகளை சேர்ந்த 1,008 மாணவ, மாணவிகள் பாதபூஜை செய்து வழிப்பட்டனர்.

இந் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய தருமபுர ஆதினம் குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் ஆசி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் நெகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.













Click it and Unblock the Notifications