தமிழக பள்ளிகளில் யோகா.. ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் பங்கேற்பு
சென்னை: தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் இன்று சர்வதேச யோகா தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

குறிப்பாக பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் கலந்து கொண்டு ஆர்வத்துடன் யோகா செய்தனர்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கரூர் பரணி கல்வி குழுமத்தை சேர்ந்த 5000 மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். தாளாளர் எஸ். மோகனரெங்கன், செயலாளர் பத்மாவதி மோகனரெங்கன், முதன்மை முதல்வர் சி.ராமசுப்ரமணியன் மற்றும் அனைத்து ஆசிரியர்கள். மாணவர்கள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல்லில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நேரு யுவகேந்திரா யோகாசன சங்கம், மாவட்ட யோகாசன சங்கம் ஆகியவை இணைந்து யோகாசன தின விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தன.

மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை கூடுதல் காவல் கண்பாணிப்பாளர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். சிறுவர்கள், மாணவ-மாணவிகள், பெண்கள் உள்பட சுமார் 1000 பேர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications