போலி பத்திரப் பதிவு செய்த வழக்கில் நீலாங்கரை சார் பதிவாளர் தாமு அதிரடி கைது
போலியாக பத்திரப்பதிவு செய்ய உடந்தையாக இருந்ததாக நீலாங்கரை சார் பதிவாளர் தாமு கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: போலியாக பத்திரப்பதிவு செய்ய உடந்தையாக இருந்ததாக நீலாங்கரை சார் பதிவாளர் தாமு கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றம் 48 மணிநேரத்தில் கைது செய்ய நேற்று முன்தினம் உத்தரவிட்ட நிலையில், இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை திருவான்மியூரை சேர்ந்த சக்திகுமார் என்பவர் தன்னுடைய குடும்ப சொத்துகளை போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்துள்ளார். இதுபற்றி அவரது சகோதரி சாவித்திரி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த போது, போலி ஆவணங்கள் மூலம் பத்திரபதிவு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த போலி பத்திரபதிவுக்கு நீலாங்கரை சார்பதிவாளர் தாமு உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சார் பதிவாளர் தாமு மற்றும் போலி பத்திரபதிவுக்கு உடந்தையாக இருந்த நபர்களை 48 மணி நேரத்திற்குள் கைது செய்யும்படி காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் நேற்று முன்தினம் அதிரடியாக உத்தரவிட்டார்.
இந்நிலையில் தாமுவை போலீசார் இன்று கைதுசெய்துள்ளனர். தாமுவிடம் நடத்தப்படும் விசாரணையில் பல தகவல்கள் வெளிவரக்கூடும் எனக் கூறப்படுகிறது.
இதற்கு முன்பு திருவான்மியூரை சேர்ந்த சுமிதா (40) என்பவருக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்புள்ள தந்தையின் சொத்துகளை போலி ஆவணங்கள் தயாரித்து சுமிதாவின் தாயும், சகோதரனும் அபகரித்துள்ளனர். இதற்கும் நீலாங்கரை சார்பதிவாளர் தாமு உடந்தையாக இருந்தது உள்பட பல புகார்கள் அவர் மீது உள்ளதாக கூறப்படுகிறது.
-
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
நகைகள் கிடைக்கவில்லை.. அஜித்குமார் மீது நிகிதா அளித்த நகை திருட்டு புகாரை முடித்து வைத்தது சிபிஐ! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
நிலம் அபகரிப்பு.. அதிமுக MP தம்பிதுரைக்கு எதிரான வழக்கு! மாவட்ட ஆட்சியருக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ












Click it and Unblock the Notifications