கி.வீரமணி மீது தாக்குதல்- சுப.வீரபாண்டியன் கண்டனம்
சென்னை: திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி மீதான தாக்குதலுக்கு திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுப.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில்,
விருத்தாசலம் மாநாட்டில் கலந்து கொள்ள சென்றிருந்த திராவிடர் கழகத் தலைவர் வீரமணி மீது தாக்குதல் நடத்தப் பட்ட செய்தி மிகப் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் தந்துள்ளது.
கி.வீரமணியின் ஆழமான, ஆதாரங்கள் நிறைந்த கருத்துகளுக்கு விடை சொல்ல இயலாதவர்கள், சொற்களுக்குப் பதிலாகக் கையில் கற்களை ஏந்தியுள்ளனர்.
இப்போதே மத்திய அரசில் ஆட்சிக்கு வந்து விட்டதாகக் கருதிக் கொண்டு சிலர் ஆடும் ஆட்டம், எல்லை மீறிப்போய்க் கொண்டிருக்கிறது.
கரடுமுரடான பாதைகளைக்கடந்த வந்த திராவிடர் கழகத்திற்கு இவையெல்லாம் புதிதல்ல. தாக்குதல்களிலேயே வளர்ந்த இயக்கம் தான் திராவிட இயக்கம்.
கி.வீரமணி மீதான தாக்குதல்களுக்கு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை, தன் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
வன்முறையாளர்கள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications