ஸ்டாலினிடம் சு.சுவாமி சொன்ன 'ரகசியம்' இதுதானா?

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கல்யாணத்தில் பேசிக்கொண்ட சுப்பிரமணியன் சுவாமியும், ஸ்டாலினும்- வீடியோ

    சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் மீது விரைவில் ஊழல் வழக்கு தொடர தாம் திட்டமிட்டுள்ளதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சென்னையில் மருத்துவர் மோகன் காமேஸ்வரன் இல்லத் திருமணம் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    Subramanian Swamy to file corruption cases againsn TN Ministers?

    அப்போது, சுப்பிரமணியன் சுவாமியுடன் ஸ்டாலின் இயல்பாக உரையாடிக் கொண்டிருந்தார். இது தொடர்பாக திமுக வட்டாரங்களில் விசாரித்த போது, தற்போதைய தமிழக அரசியல் நிலைமை குறித்து இருவரும் விவாதித்தனர்.

    இந்த உரையாடலின் போது, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்த பின்னர் நிறைய சம்பவங்கள் நடக்க இருக்கின்றன. ஆளுநர் என்னுடைய நண்பர்தான்... முதல்வர் எடப்பாடி உள்ளிட்ட சீனியர் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு தொடர அனுமதி கேட்டிருக்கிறேன்.

    ஏற்கனவே அமைச்சர்களின் ஊழல் பட்டியலை பிரதமரிடமும் கொடுத்திருக்கிறேன்.. ஆளுநர் விரைவில் அனுமதி தந்துவிடுவார் என ஸ்டாலினிடம் சுப்பிரமணியன் சுவாமி கூறினாராம்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+