நிதி ஒதுக்காத தமிழக அரசு.. ரேஷனில் நிறுத்தப்பட்ட பருப்பு, பாமாயில்.. அவதியில் மக்கள்!
தமிழக அரசு நிதி ஒதுக்காததால் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை: நியாய விலைக் கடைகளில் மானிய விலையில் வழங்கப்படும் பருப்பு மற்றும் பாமாயில் நிறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு நிதி ஒதுக்காததே இதற்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசின் பொது வினியோக திட்டத்தின் கீழ் உணவு மற்றும் கூட்டுறவு துறை சார்பில் ரேஷன் கடைகளில் இலவச அரிசி மற்றும் சர்க்கரை, கோதுமை, மண்எண்ணெய் ஆகிய பொருட்கள் மானியவிலையில் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வெளிச்சந்தையில் உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2007-ம் ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதி சென்னையில் செயல்படுத்தியது.
அதே ஆண்டு மே மாதத்தில் பிற மாவட்டங்களிலும் சிறப்பு பொது வினியோக திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியது. இதனால் ஏழை எளிய மக்கள் பெரிதும் பயனடைந்து வந்தனர்.

அண்டை மாநிலங்களிலிருந்து கொள்முதல்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ஒவ்வொரு மாதமும் 13 ஆயிரத்து 450 மெட்ரிக் டன் துவரம் பருப்பு, 7 ஆயிரம் மெட்ரிக் டன் உளுந்தம் பருப்பு, 15 ஆயிரம் கிலோ லிட்டர் பாமாயில் ஆகியவற்றை அண்டை மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கொள்முதல் செய்து மானிய விலையில் வழங்கியது.

மானிய விலையில் பருப்பு, பாமாயில்
அதன்படி ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், உளுந்தம் பருப்பு 30 ரூபாய்க்கும், பாமாயில் ஒரு கிலோ ரூ.25 க்கும் மானியவிலையில் விற்பனை செய்யப்பட்டது. இதன்மூலம் ஏராளமான குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து வந்தனர்.

அரசு நிதி ஒதுக்க வில்லை
சிறப்பு பொது வினியோக திட்டத்தை கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் செயல்படுத்துவதற்கு தமிழக அரசு சுமார் ரூ.1,158 கோடி ஒதுக்கீடு செய்தது. ஆனால் 2016-17-ம் நிதி ஆண்டு இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை எனத் தெரிகிறது.

நிறுத்தப்பட்ட பருப்பு, பாமாயில்
இதனால் பருப்பு வகைகள், பாமாயில் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் கோரப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக ரேஷன் கடைகளில் மானிய விலையில் வழங்கப்பட்டு வந்த பருப்பு வகைகள், பாமாயில் விற்பனை அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications