Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சூர்யா நகரை தத்தெடுத்த சுஹாசினி- மணிரத்னம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த சூர்யா நகரை சுஹாசினி - மணிரத்னம் தம்பதியர் தத்தெடுத்து உள்ளனர்.

தமிழகத்தில் சில வாரங்களாக கொட்டித் தீர்த்த மழை சென்னை மற்றும் கடலூர் மக்களின் வாழ்வாதரங்களை மொத்தமாக அழித்துச் சென்று விட்டது.

Suhasini - Maniratnam Couple Adopted Surya Nagar

மக்கள் மழை, வெள்ளம் பாதிப்பிலிருந்து மீண்டுவர தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நல்ல உள்ளம் படைத்த பலர் மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றனர்.

மேலும் நடிக, நடிகையரும் மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு சுஹாசினி - மணிரத்னம் தம்பதியர் தங்களால் முடிந்த பல்வேறு உதவிகளை வழங்கி வந்தனர்.

உணவு, உடைகள், மருந்துப்பொருட்கள், குடிநீர், பால் பவுடர், பெண்களுக்குத் தேவையான பொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் ஆகியவற்றை இத்தம்பதியர் ஏற்கனவே மக்களுக்கு வழங்கி இருந்தனர்.

இந்நிலையில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட சென்னை கோட்டூர்புரம் சூர்யா நகரை சுஹாசினி - மணிரத்னம் தம்பதியர் தத்தெடுத்து உள்ளனர்.

Suhasini - Maniratnam Couple Adopted Surya Nagar

நாம் இயக்கம் என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து முதல்கட்டமாக அந்தப் பகுதி மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி இருக்கின்றனர்.

Suhasini - Maniratnam Couple Adopted Surya Nagar

மேலும் மருத்துவ உதவிகள் உட்பட தேவைப்படும் உதவிகளை தொடர்ந்து வழங்கிட இருவரும் முடிவு செய்திருக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+