For Quick Alerts
For Daily Alerts
Just In
திருவள்ளூர், தஞ்சாவூரில் வெளுத்து வாங்கிய வெயில்... வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கும் மக்கள்
திருவள்ளூரில் அதிகபட்சமாக 110 டிகிரி வெப்ப முகத்தை காட்டியுள்ளது சூரியன்.
திருத்தணி: கோடை காலம் தொடங்கியதையடுத்து வெயில் கோர முகத்தை காட்டியதன் விளைவாக திருவள்ளூரில் 110 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. கோடை வெப்பத்தின் தொடக்கத்திலேயே பல மாவட்டங்களில் அநாயசமாக வெப்பம் 100 டிகிரியைத் தாண்டி வருகிறது.
இன்று அதிகபட்சமாக வெயில் தன்னுடைய கோர முகத்தை காட்டியிருப்பது திருவள்ளூர் மாவட்டத்தில் தான். சுமார் 115 டிகிரி வெப்பம் திருவள்ளூரில் மட்டும் பதிவாகியுள்ளது.
சுள்ளென சுட்டெரித்த வெயிலின் கொடுமைக்கு வெளியில் தலை காட்டாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர் மக்கள். இதனால் திருவள்ளூரில் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் பேருந்து நிலையம், மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் குறைவாகவே இருந்தது.
இதே போன்று தஞ்சாவூரிலும் 106 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
Comments
English summary
Highest temperature recorded in tn's thiruvallur district
Story first published: Sunday, April 23, 2017, 15:43 [IST]