For Daily Alerts
Just In
அக்னி நட்சத்திரம் நாளில் நெல்லையிலும் பலத்தமழை!
நெல்லை: கத்திரி எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கிய முதல் நாளிலேயே நெல்லையிலும் பலத்த மழை கொட்டி மக்களை மகிழ்வித்துள்ளது.
இன்று அக்னி நட்சத்திரம் தொடங்கியது. கடும் வெயில் அடிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக சென்னை முதல் நெல்லை வரை தமிழகத்தில் பரவலாக ஓரளவு மழை பெய்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, குற்றாலம், கடையநல்லூர், புளியங்குடி உள்ளிட்ட பகுதிகளில் இடியோ,மின்னலோ இல்லாமல் 4.20 மணி முதல் பலத்தமழை கொட்டியது.
இம்மழையின் காரணமாக குற்றாலம்,ஐந்தருவி,உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் தொடங்கியுள்ளது. இதனால் உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் சுற்றுலாப் பயணிகளும் குஷியைடந்துள்ளனர்.
English summary
A heavy ummer rain lashed many parts of Nellai district.
Story first published: Sunday, May 4, 2014, 16:46 [IST]