கோடை மழை கொட்டப்போகுதாம்... வானிலையின் ஜில் அறிவிப்பு
வெப்ப சலனம் காரணமாக ஒரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தே காணப்படும் என்றும் வெப்பச்சலனத்தினால் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும். அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு வழக்கத்தை விட வெப்பம் சற்று அதிகரித்தே காணப்படும்.
கடந்த 24 மணி நேத்தில் அதிகமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பம், வேலூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் பதிவானது.
வெப்ப சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மே மாதத்தில் கோடை மழையை எதிர்பார்க்கலாம். தென் கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது இது நகரும் பட்சத்தில் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications