எப்.எம். ரேடியா உரிம ஏலத்தில் பங்கேற்க சன் குழுமத்திற்கு அனுமதி மறுப்பு.. மத்திய அரசு அடுத்த 'செக்'
டெல்லி : சன் குழுமம் அடுத்தக்கட்ட பண்பலை வானொலி உரிம ஏலத்தில் பங்கேற்க மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது.
உள்துறை அமைச்சகத்திடமிருந்து உரிய பாதுகாப்பு அனுமதி பெறவில்லை என்ற காரணத்தை சுட்டிக்காட்டி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

புதியதாக பண்பலை வானொலி உரிமங்களை வழங்குவதற்காக மத்திய அமைச்சகங்களுக்கு இடையேயான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய நிதி மற்றும் சட்டம், தொலைத் தொடர்புத்துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். 3 வது கட்டமாக பண்பலை வானொலிகளுக்கான உரிமம் வழங்குவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதில் சன் குழுமம் உட்பட மூன்று நிறுவனங்கள் ஏலத்தில் பங்கு பெற அனுமதி மறுக்கப்பட்டது. இரண்டு நிறுவனங்களின் விண்ணப்பங்கள் தொழில் நுட்ப காரணங்களை சுட்டிக்காட்டி நிராகரிக்கப்பட்ட நிலையில், சன் குமுமத்தின் விண்ணப்பம் பாதுகாப்பு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சன்குழுமத்தின் தொலைகாட்சிகளுக்கு பாதுகாப்பு அனுமதி வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே அனுமதி மறுத்துள்ளதை சுட்டிக்காட்டி எப்.எம் ரேடியோவிற்கான ஏலத்தில் பங்கு பெற அந்நிறுவனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாககூறப்படுகிறத. சன் குழுமம் சார்பில் ஏற்கனவே நாடெங்கிலும் 45 எப்.எம் வானொலிக்கள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications