சென்னையில் திரண்ட ரஜினி ரசிகர்கள்.. சூப்பர் ஸ்டாரை நேரில் பார்த்து உற்சாகம்!
சென்னையில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுப்பதற்காக வந்த நடிகர் ரஜினிகாந்த்தை ரசிகர்கள் உற்சாகத்தோடு வரவேற்றனர்.
சென்னை: 9 ஆண்டுகளுக்கு பிறகு ரசிகர்களை சந்திக்க சென்னை ராகவேந்திரா கல்யாண மண்டபம் வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இன்று முதல் 5 நாட்களுக்கு சென்னையில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சிக்காக திட்டமிட்டபடி காலை 9 மணியளவில் தனது ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேடையில் சூப்ப்ர ஸ்டார் ரஜினிகாந்துடன் இயக்குனர் எஸ்.பி.முத்துராமனும் பங்கேற்றுள்ளார். முதல் நாளாக இன்று கரூர், திண்டக்கல் , கன்னியாகுமரி மாவட்ட ரசிகர்களுடன் மாவட்டத்திற்கு 200 பேர் வீதம் 600 பேருடன் இன்று ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.
பான்கார்டுடன் கூடிய அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே புகைப்படம் எடுக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தனது வழக்கமான கருப்பு நிற பைஜாமாவில் மேடையில் தோன்றியுள்ள சூப்பர் ஸ்டாருக்கு விசில் பறக்க வரவேற்பும், உற்சாகமளித்தும் ரசிகர்கள் புகைப்படம் கூடியுள்ளனர்.












Click it and Unblock the Notifications