வைரமுத்து மனம் காயப்பட்டால் என்ன? படாவிட்டால் என்ன? - இது எஸ்வி சேகர்!
வைரமுத்து ஆண்டாள் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகரும் பாஜக நிர்வாகிகளில் ஒருவருமான எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: வைரமுத்து ஆண்டாள் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகரும் பாஜக நிர்வாகிகளில் ஒருவருமான எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.
ஆண்டாள் குறித்து வைரமுத்து மேற்கோள் காட்டிய கருத்து ஒன்று பெரும் சர்ச்சையானது. இதனை தொடர்ந்து வைரமுத்துவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்நிலையில் தன்மீதான சர்ச்சை குறித்து விளக்கமளித்து வீடியோ ஒன்றை வைரமுத்து வெளியிட்டுள்ளார். அதில் தான் மேற்கோள் காட்டியது தவறாக சித்தரிக்கப்பட்டு திரித்து கூறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மூச்சையுற்று கிடக்கிறது
இதனால் தனது மனம் உடைக்கப்பட்டிருக்கிறது என்றும் தனக்குள் ஒலித்துக்கொண்டிருந்த தமிழ்க்குயில் கடந்த 10 நாட்களாக மூச்சையுற்று கிடப்பதாகவும் உருக்கமாக வீடியோவில் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

மன்னிப்பு கேட்கவில்லை
இந்நிலையில் அவரது உருக்கமான வீடியோ குறித்து நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர் கருத்து தெரிவித்துள்ளார். வைரமுத்து தான் கூறிய தவறான கருத்துக்கு மன்னிப்பு கேட்கவில்லை என எஸ்வி சேகர் குற்றம்சாட்டியுள்ளார்.

காயம்பட்டால் என்ன?
தான் கூறியது சரிதான் என முட்டாள்தனமாக வைரமுத்து பேசுவதாகவும் எஸ்வி சேகர் சாடியுள்ளார். வைரமுத்துவின் மனம் காயம்பட்டால் என்ன படாவிட்டால் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அடிப்படை தமிழ்கூட தெரியவில்லை
வைரமுத்து காசுக்காக என்ன வேண்டுமானலும் எழுதுவார் என்றும் எஸ்வி சேகர் தெரிவித்தார். அடிப்படை தமிழ் கூட தெரியாமல் இருக்கிறார் வைரமுத்து என்றும் எஸ்விசேகர் தெரிவித்தார்.

விருது வாங்கவே வீடியோ
அரசிடம் விருது வாங்கும் முயற்சியாகவே வைரமுத்து இந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார் என்றும் எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார். ஆண்டாள் பிரச்சனையில் வைரமுத்துவுக்கு எதிராக ஆரம்பத்தில் இருந்து பாஜகவினரும் குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications