சுவாதியும், ராம்குமாரும் நீண்டகால பேஸ்புக் நண்பர்களா? போலீஸ் கமிஷனர் பதில்!
சென்னை: சுவாதி கொலைக்கு காரணம், ராம்குமாருடன் ஏற்பட்ட பேஸ்புக் கூடா நட்புதானா என்ற கேள்விக்கு சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் பதிலளித்தார்.
சுவாதி கொலை தொடர்பாக நெல்லை மாவட்டத்தில் ராம்குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் சென்னையில் காலை 11.30 மணியளவில் நிருபர்களை சந்தித்தார் கமிஷனர் ராஜேந்திரன்.
அப்போது, கொலையாளி ராம்குமார் என்பதை உறுதி செய்த கமிஷனர், அதற்கான ஆதாரங்களை இப்போது கூற முடியாது என்றார்.

3 மாதங்கள் முன்பு
கொலையாளி 3 மாதங்கள் முன்புதான் சென்னைக்கு வந்ததாகவும், சுவாதி வீட்டுக்கு பக்கத்து தெருவிலுள்ள மேன்ஷனில் தங்கியிருந்து வேலை தேடி வந்ததாகவும் குறிப்பிட்ட கமிஷனர், சுவாதி வேலைக்கு செல்லும் இடங்களில் அவ்வப்போது அவரை பின்தொடர்ந்து சென்று, பேச்சு கொடுத்து ராம்குமார், தொல்லை செய்து வந்ததாகவும் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

காரணம் சொல்ல மாட்டோம்
அதேநேரம், கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து இப்போது கூற முடியாது என்றும் கமிஷனர் தெரிவித்தார். கமிஷனர் தனது அரை மணி நேர பேட்டியில் பெரும்பாலான விஷயங்களை வெளியிடாமல் தவிர்க்க முயன்றதை பார்க்க முடிந்தது.

பேஸ்புக்
பேட்டியின்போது, நிருபர்கள் மடக்கி மடக்கி பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு நழுவியபடியேதான் பதிலளித்தார் கமிஷனர் ராஜேந்திரன். அதில் ஒரு கேள்வி, சுவாதியின் பேஸ்புக் பற்றி வந்தது.

பேஸ்புக் நட்பு
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ராம்குமாருக்கும், சுவாதிக்கும் பேஸ்புக்கில் அறிமுகம் ஏற்பட்டதாகவும், அந்த பழக்கம் அதிகரித்ததால்தான் ராம்குமார், சென்னைக்கு வந்து, சுவாதி வீட்டருகே தங்கியதாகவும் கூறப்படுகிறதே என்பது நிருபர் கேள்வி.

விசாரணைக்கு ஒத்துழையுங்கள்
இதற்கு பதிலளித்த கமிஷனர், கொலைக்கான காரணம் குறித்து இப்போது எதையும் கூற முடியாது என்றதோடு, 'விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்' என்று மீடியாக்களை கேட்டுக்கொண்டார். தனது அரை மணி நேர பேட்டியில் அதிகம் முறை கமிஷனர் உச்சரித்த வார்த்தையும், இதுதான்.
உறுதியுமில்லை, மறுக்கவுமில்லை
பேஸ்புக்கில் பல்வேறு நண்பர்களுடன் சுவாதிக்கு பழக்கம் இருந்ததாகவும், அதில் ஒருவர்தான் ராம்குமார் எனவும், ஏற்கனவே செய்திகள் கசிந்தன. ஜவுளி நிறுவனத்தில் வேலை பார்ப்பது பிடிக்காமல்தான் ராம்குமார் நட்பை சுவாதி துண்டிக்க முயன்றதாகவும், எனவே அவர் கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் பேஸ்புக் நட்பை, கமிஷனர், உறுதிப்படுத்தவும் இல்லை, நிராகரிக்கவும் இல்லை.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications