ரயில்வே போலீஸ் திறமையின்மை.. சுவாதி கொலை வழக்கு சென்னை காவல்துறைக்கு அதிரடி மாற்றம்!
சென்னை: இன்போசிஸ் ஊழியர் சுவாதியை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து வெட்டி கொலை செய்த கொலையாளியை பிடிக்க முடியாமல் ரயில்வே காவல்துறை திணறுவதால், இந்த விசாரணை, சென்னை காவல்துறைக்கு (நுங்கம்பாக்கம் காவல் நிலையம்) மாற்றப்பட்டுள்ளது.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில், இன்போசிஸ் நிறுவன ஊழியர் சுவாதி, ஒரு வாலிபரால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

ரயில் நிலைய வளாகத்தில் நடைபெற்ற கொலை என்பதால், இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை என்பதால், கொலையாளியின் உருவ படம் போலீசாருக்கு கிடைக்கவில்லை.
ரயில் நிலையம் அருகேயுள்ள வீட்டுக்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து, கொலையாளியை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். ஆயினும் சம்பவம் நடந்து நான்கு நாட்கள் ஆன பிறகும் கொலையாளியை கைது செய்ய முடியவில்லை.
சிசிடிவி வீடியோ கிடைத்த பிறகும் ரயில்வே போலீசாரால் குற்றவாளியை பிடிக்க முடியவில்லை என்பது அந்த போலீசாரின் திறமை மீது மக்களுக்கு நம்பிக்கையை இழக்க செய்தது. முன்னதாக, சுவாதி கொலை செய்யப்பட்ட பிறகும், 2 மணி நேரம், அவரது உடலை கூட மருத்துவமனைக்கு அனுப்பாமல் பிளாட்பாரத்திலேயே வைத்திருந்து விசாரணை நடத்தி அலட்சியம் காட்டியது ரயில்வே போலீஸ்.

எதிர்க்கட்சிகள், ஊடகங்கள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றின் நெருக்கடிக்கு மத்தியில், சென்னை ஹைகோர்ட்டும் சுவாதி கொலை விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. ரயில்வே போலீசாருக்கும், தமிழக போலீசாருக்கும் சரியான புரிதல் இல்லையா, என தமிழக அரசு வழக்கறிஞரிடம் இன்று, கேள்வி எழுப்பி சாடியது ஹைகோர்ட்.
இந்நிலையில், சுவாதி கொலை வழக்கு விசாரணை, ரயில்வே போலீசாரிடமிருந்து சென்னை காவல்துறைக்கு இன்று மதியம், மாற்றப்பட்டுள்ளது. இதை ரயில்வே டி.ஐ.ஜி. பாஸ்கரனும் உறுதி செய்தார். மாநில டி.ஜி.பி அசோக்குமார் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சுவாதி கொலை வழக்கு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, அந்த போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். எனவே இனிமேல் சுவாதி கொலை வழக்கு விசாரணை சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கலாம்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
கடலூரில் முகம் சிதைத்த நிலையில் கிடந்த இளம்பெண் சடலம்.. கொலையாளி யார்? போலீஸ் தீவிரம் -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications