போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துவிட்டு மீண்டும் மயக்கமைடந்த ராம்குமார்
நெல்லை: சுவாதி கொலை வழக்கில் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் ராம்குமார், கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் சுயநினைவு திரும்பி, போலீசாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால் பிறகு மயக்கமடைந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுவாதி கொலை வழக்கில், போலீசார் தன்னை, நெருங்கியதை உணர்ந்த நிலையில் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார் ராம்குமார். உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

இதையடுத்து நெல்லை அரசு மருத்துவமனையில் ராம்குமார் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ராம்குமார் கழுத்தில் எக்ஸ்-ரே எடுத்து பார்க்கப்பட்டது. மொத்தம் 10 இடங்களில் வெட்டு காயம் இருந்தபோதிலும், உயிருக்கு ஆபத்தில்லை என்பதை மருத்துவர்கள் உணர்ந்தனர்.
இதையடுத்து, ராம்குமாருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. வெட்டு காயங்களுக்கு தையல் போடப்பட்டது.
இதையடுத்து இன்று காலை ராம்குமார் சுய நினைவுக்கு திரும்பினார். காத்திருந்த போலீசார் அவரிடம், கொலைக்கான காரணம் குறித்து வாக்குமூலம் வாங்கினர்.
போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த சிறிது நேரத்தில் ராம்குமார் மீண்டும் மயக்க நிலைக்கே போய்விட்டார். எப்போது நினைவு திரும்பும் என அவரது, தந்தை, தாய், தங்கை உள்ளிட்ட குடும்பத்தார் ஆஸ்பத்திரியில் காத்திருக்கிறார்கள்.

நெல்லை அரசு மருத்துவ கல்லூரி டீன், சித்தி அத்தியமுனவரா கூறுகையில், "கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற ராம்குமார் முழுமையாக குணமடைய 2 நாட்கள் ஆகலாம்.
ராம்குமார் தனது கழுத்து பகுதியில் ஆழ வெட்டியுள்ளார். எனவே பேச முடியாத நிலையில் உள்ளார். உயிருக்கு ஆபத்து என்று கூற முடியாது. தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். எனவே பிறகுதான் மற்ற விஷயங்களை சொல்ல முடியும்" என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications