டெங்கு காய்ச்சல்.. தொடரும் பலி.. என்ன செய்கிறது அரசு?.. ராமதாஸ் கேள்வி!
சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டு கடந்த வாரத்தில் மட்டும் 5 பேர் பலியாகியுள்ளனர். 25 பேர் அந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசின் மீது பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொள்ளாச்சியை சேர்ந்த கிருஷ்ணன், திருத்தணியைச் சேர்ந்த யுவராஜ் என்ற 4 வயது சிறுவன், சந்தோஷ் (4), மோகன் குமார் (5) மோகன் (9) என ஐந்து பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் அனைவருமே டெங்கு காய்ச்சலால்தான் இறந்தனர் என்பதை மருத்துவர்கள் தனிப்பட்ட முறையில் ஒப்புக் கொண்டாலும், அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தயங்குகின்றனர்.
கடந்த 5 ஆண்டுகளாக டெங்கு காய்ச்சலில் இறப்போரின் எண்ணிக்கை அதிகாரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு தமிழக அரசும், சுகாதாரத் துறையும்தான் பொறுப்பேற்க வேண்டும். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் இருப்பதை தமிழக அரசு வெளிப்படையாக ஒத்துக் கொண்டு அதனை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், இந்தியா விடுதலை பெற்று 69 ஆண்டுகள் ஆன பின்னரும், டெங்கு காய்ச்சலால் பொதுமக்கள் உயிரிழப்பது மிகப் பெரிய அவலமாகும் என்று தெரிவித்துள்ளார் ராமதாஸ்.
டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் தென்பட்டால் பதற்றமடையாமல் பப்பாளி இலைச்சாறு, மலை வேம்பு சாறு ஆகியவற்றை காய்ச்சி குடியுங்கள் என்றும், நில வேம்பு கசாயத்தை பருகுங்கள் என்றும் ஒரு டாக்டராக பல டிப்ஸ்களையும் தனது அறிக்கையில் வழங்கியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications