முதல்வர் ஓ.பி.எஸ். கூட்டிய முதல் சட்டசபை கூட்டத் தொடர் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மூன்று நாட்கள் நடந்த தமிழக சட்டசபைக் கூட்டம் திங்கட்கிழமை பிற்பகலுடன் முடிவடைந்தது. மீண்டும் கூடுவது குறித்த மறுதேதி குறிப்பிடப்படாமல் இந்தத் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக பதவியேற்றபின்னர் சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது.

முதல்நாளில் இருந்தே எதிர்கட்சியினரின் வெளிநடப்பு, அமளி, கூச்சல் குழப்பம் என களை கட்டியது.

Tamil Nadu assembly session postpone

திமுக தலைவர் கருணாநிதி தனக்கு வசதியான இடம் ஒதுக்கப்படவில்லை என்று கூறி வருகைப் பதிவேட்டில் கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு சென்றுவிட்டார்.

எதிர்கட்சித்தலைவர் விஜயகாந்த் ரகசியமாக வந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு சென்றார்.

முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், முதல்வருக்கான நாற்காலியில் அமராமலேயே கூட்டத்தொடரை நடத்தினார். எதிர்கட்சியினரின் சராமரி கேள்விகளுக்கு விளக்கங்களும் அளித்தார். மூன்று நாட்களில் இரண்டு நாட்கள் திமுக எம்.எல்.ஏக்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.

ஒருவழியாக 3 நாள் நடைபெற்ற கூட்டம் இன்று பிற்பகலுடன் முடிவடைந்தது.

இத்தனை அமளிக்கிடையேயும் முல்லைப்பெரியாறு, கச்சத்தீவு தொடர்பான தீர்மானங்கள் சட்டசபையில் நிறைவேறின. நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட 7 மசோதாக்களும் இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+