வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்க ஏற்பாடு:தலைமைத்தேர்தல் அதிகாரி
சென்னை: வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக மனுதாரர்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாக தகவல் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்திய தலைமைத்தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 2016-ம் ஆண்டு தேர்தலுக்கான வாக்காளர் திருத்த வரைவுப் பட்டியல் கடந்த செப்டம்பர் 15-ந்தேதி வெளியிடப்பட்டது. சேர்க்கை மற்றும் நீக்கம் தொடர்பான மனுக்கள் கடந்த செப்டம்பர் 15-ந்தேதி முதல் கடந்த அக்டோபர் 24-ந்தேதி வரை பெறப்பட்டன. பெறப்பட்ட படிவங்கள் மாவட்ட அளவில் பரிசீலிக்கப்பட்டன. மனுதாரர்களுக்கு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த திருத்தத்தை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தார்கள். பெறப்பட்ட படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டன. வாக்குச்சாவடி அதிகாரிகள், படிவங்களை சரிபார்த்து வருகிறார்கள். வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு மனுதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மனுதாரர்கள் தங்களது படிவம் எந்த நிலையில் உள்ளது என்பதை தலைமைத் தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில் கண்டறிந்து கொள்ளலாம். மொபைல் எண்களை கொடுத்துள்ள மனுதாரர்களுக்கு அவ்வப்போது எஸ்எம்எஸ் வாயிலாக தகவல் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
-
முடிவுக்கு வந்தது இழுபறி! புதுச்சேரி, கேரளா, அசாமில் வேட்புமனுத் தாக்கல் ஓவர்! யாருக்கு வெற்றி? -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications