கடல் கொள்ளையரால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் உடலை கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை
சென்னை: கடல் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட, தமிழக மீனவர் உடலை மீட்டுவர பக்ரைன் நாட்டு தூதரக மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக மீன்வளத்துறை செயலாளர் எஸ்.விஜயகுமார் பக்ரைனிலுள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு கடல் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் தாமஸ் உடலை கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறார். உயிரிழந்த தாமஸ் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு, முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் இழப்பீடு தொகை அளிக்க உத்தரவிடுகிறேன். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 21ம்தேதி கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர் தாமஸ், பக்ரைன் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது கடல் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications