7 தமிழர் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறைக்கு அறிக்கை அனுப்பவில்லை-ஆளுநர் மாளிகை மறுப்பு
Recommended Video

சென்னை: 7 தமிழர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை பரிந்துரை அனுப்பியதை மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பவில்லை என்று ஆளுநர் மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது.
பேரறிவாளன், நளினி உட்பட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள 7 பேரையும் சட்டப் பிரிவு 161ஐ கீழ் விடுதலை செய்வதற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழக அமைச்சரவை முடிவு செய்து அந்த பரிந்துரையை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பியதாக அறிவித்தது.

இந்த பரிந்துரையை ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக நேற்றுமுன்தினம் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் இன்று ஆளுநர் மாளிகை இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சில மீடியாக்களில், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள 7 பேர் விடுதலை தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தமிழக ஆளுநர் அறிக்கை அனுப்பி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்த யூகத்தின் அடிப்படையில் சில செய்தி சேனல்கள் விவாத நிகழ்ச்சிகளையும் நடத்தின.
ஆனால், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அப்படி எந்த அறிக்கையையும் அனுப்பவில்லை. இந்த வழக்கு மிகவும் சிக்கலானது. சட்டம், நிர்வாகம் மற்றும் அரசியல் சாசன விவகாரங்கள் தொடர்பாக ஆலோசோிக்கப்பட தேவையுள்ள வழக்கு இது.
மாநில அரசிடமிருந்து செப்டம்பர் 14ஆம் தேதி தான் வழக்கு தொடர்பான, தீர்ப்பு விவரம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் ஆளுநர் மாளிகைக்கு வந்துள்ளன.
இந்த ஆவணங்களை பரிசீலிக்கும் பணிகள் நடக்கின்றன. தேவைப்பட்டால், தேவைப்படும் ஆலோசனைகள் பெறப்படும். முடிவு என்பது அரசியல் சாசனத்திற்கு உட்பட்டதாக நியாயமானதாக இருக்கும். இவ்வாறு ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications