தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்... ஷூ, செருப்புக்கு தடை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை முதல் தொடங்குகிறது.
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை முதல் தொடங்குகிறது. இந்த தேர்வில் 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 6,737 பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு வருகிற மார்ச் 2ம் தேதி தொடங்கும் என்று தமிழக அரசு கடந்த மாதம் அறிவித்தது.
இதனைத்தொடர்ந்து பிளஸ் 2 மாணவ, மாணவிகளுகள் தேர்வு எழுத 2,427 தேர்வு மையங்களும், 3 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு குழு அமைப்பு
தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களை கண்காணிப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 300 பேர் கொண்ட பறக்கும் படையினர் அமைக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பறக்கும் படையினர் தேர்வு நடைபெறும் அனைத்து பள்ளிகளிலும் சோதனை நடத்துவார்கள்.

மாணவர்களுக்கு கட்டுப்பாடு
ஒவ்வொறு மாவட்டத்திலும் தேர்வை கண்காணிக்க 6 இயக்குனர்கள் மற்றும் 20 இணை இயக்குனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தேர்வு எழுத வரும் மாணவர்கள் தேர்வு மையங்களில் செருப்பு, ஷூ, டை, செல்போன் உள்ளிட்டவைகளை எடுத்து வர அனுமதி கிடையாது.

ஹால் டிக்கெட்
தேர்வு எழுதும் மாணவர்களின் ஆள்மாறாட்டத்தை தடுக்க ஹால் டிக்கெட் , விடைத்தாள் மற்றும் வருகை பதிவேட்டிலும் மாணவர்களின் புகைப்படம் இடம்பெறுகிறது.

புகார்களுக்கு
பொதுமக்களின் கருத்துக்கள், புகார்கள், சந்தேகங்களை தேர்வுக் கட்டுப்பாட்டு அறை எண்களை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம். 8012594114, 8012594115, 8012594122, 8012594124 ஆகிய எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். இந்த எண்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பாட்டில் இருக்கும் .
-
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications