காவிரி விவகாரம்.. மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு நாளை வழக்கு?
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மீது வழக்கு தொடர தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் டெல்லி விரைந்துள்ளனர்.
சென்னை: காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மீது வழக்கு தொடர தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் டெல்லி விரைந்துள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதனை மத்திய அரசு செயல்படுத்தவில்லை. இதனால் தமிழக விவசாயிகள் பெருத்த ஏமாற்றமடைந்துள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து வரும் ஏப்ரல் 2ஆம் தேதி அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாத மத்திய அரசு மீது அவமதிப்பு வழக்கு தொடரவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் காவிரி தொடர்பாக நாளை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடர தமிழக பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் டெல்லி விரைந்துள்ளனர். பொதுப்பணித்துறை முதன்மை செயலர் பிரபாகர் டெல்லி செல்கிறார். காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியும் டெல்லி செல்கிறார்