4 வருடங்களில் 22% "ஜம்ப்"பைக் கண்ட தமிழக வாக்காளர்கள் எண்ணிக்கை!
சென்னை: கடந்த 4 வருடங்களில் தமிழகத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கை 22 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு கோடி புதிய வாக்காளர்கள் இணைந்துள்ளனர்.
இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இவர்களால் தேர்தல் முடிவை ஒட்டுமொத்தமாக மாற்றிப் போட முடியும் என்பதால் இவர்கள் மீதான கவனம் அரசியல் கட்சிகளிடம் அதிகமாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்த 2011ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக அணிகளுக்கு இடையே கிட்டத்தட்ட 50 லட்சம் வாக்குகள்தான் வித்தியாசம்தான் என்பது நினைவிருக்கலாம்.

6 லட்சம் முதல் முறை வாக்காளர்கள்
இந்தத் தேர்தலில் 6 லட்சம் பேர் முதல் முறையாக வாக்களிக்கப் போகும் புதிய வாக்காளர்கள் ஆவர்.

பெயர் பதிவில் பெரும் ஆர்வம்
கடந்த 2011 தேர்தலில் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 71 சதவீதம் பேர்தான் வாக்காளர்களாகப் பதிவு செய்திருந்தனர். தற்போது தமிழகத்தில் உள்ளவர்களில் ஐந்து பேரில் நான்கு பேர் வாக்காளர்களாக உள்ளனர். அதாவது வாக்காளர்களாகப் பெயர் பதிவு செய்வதில் இந்த முறை அதீத ஆர்வம் காட்டப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் சிறப்புப் பணி
வாக்காளர்களை பதிவு செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையம் காட்டிய அக்கறையும், தீவிரமும்தான் இந்த அளவுக்கு அதிக அளவிலான வாக்காளர்கள் பதிவாகியிருப்பதாக கூறப்படுகிறது.

8 லட்சம் பேருக்கு எஸ்எம்எஸ்
பெயர் சேர்ப்பு உள்ளிட்டவை தொடர்பாக விண்ணப்பித்திருந்தவர்களுக்கு இந்த முறை தகவல்களை எஸ்எம்எஸ் மூலம் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. கிட்டத்தட்ட 8 லட்சம் பேருக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இடமாற்றம்
22 சதவீத உயர்வில் கிட்டத்தட்ட பாதி அளவு உயர்வுக்குக் காரணம் வாக்காளர்களின் இடமாற்றம்தான் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அதாவது வீடுகளை மாற்றியது தொடர்பான காரணங்கள்.

வட மாநில தொழிலாளர்கள்
கடந்த ஐந்து ஆண்டுகளில் பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த பலர் கட்டுமானத் தொழில் தொடர்பாக இங்கு வந்து செட்டிலாகியுள்ளனர். அவர்களும் வாக்காளர்களாக தங்களைப் பதிவு செய்து கொண்டுள்ளனர். இதுவும் வாக்காளர் எண்ணிக்கை உயரக் காரணமாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications