For Quick Alerts
For Daily Alerts
Just In
ரயில்வே துறையில் தமிழர் புறக்கணிப்பு- முற்றுகைப் போராட்டம் நடத்திய வேல்முருகன் உள்ளிட்டோர் கைது!
சென்னை: ரயில்வே துறையில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் இன்று கைது செய்யப்பட்டனர்.
ரயில்வே துறையில் 2014-ம் ஆண்டு நடந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும், அப்ரண்டிஸ் பயிற்சி பெற்ற தமிழக மாணவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்பது தமிழ் அமைப்புகளின் நீண்ட நாள் கோரிக்கை.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் 20 தமிழ் அமைப்பினர் இன்று காலை ஐ.சி.எப். பொது மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
பின்னர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட வேல்முருகன் உட்பட 200 பேரை போலீசார் கைது செய்தனர்
Comments
southern railway tamil movements velmurugan protest தெற்கு ரயில்வே தமிழ் அமைப்புகள் வேல்முருகன் கைது போராட்டம்
English summary
Tamil movements held protest against southern railway on Thursday.
Story first published: Thursday, July 2, 2015, 17:25 [IST]