பாடகர் கோவனுக்கு நவம்பர் 20ம் தேதி வரை நீதிமன்ற காவல்: எழும்பூர் கோர்ட் உத்தரவு
சென்னை: மக்கள் கலை இலக்கிய கழக பாடகர் கோவனை நவம்பர் 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
டாஸ்மாக்கு எதிராக பாடல் இயற்றி பாடிய பாடகர் கோவன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை போலீஸ் காவலில் எடுக்க எழும்பூர் கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து இரண்டு நாளில் போலீஸ் காவலில் விட எழும்பூர் கோர்ட் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி.செல்வம் உத்தரவிட்டிருந்தார். இதுகுறித்து கோவன் தாக்கல் செய்த மனுவில், தனக்கும் நக்ஸலைட்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். எனவே தன்னை காவலில் எடுத்து விசாரிக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என அவர் கோரியிருந்தார்.
இந்த வழக்கை அவசர வழக்காக தனது வீட்டில் விசாரித்த நீதிபதி சி.டி. செல்வம், பாடகர் கோவன் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் உறுப்பினர் என்றும், அந்த இயக்கம் அரசால் தடை செய்யப்பட்ட அமைப்பு இல்லை என்பதால், அவரை காவலில் எடுத்து விசாரிக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்தார்.
இந்நிலையில், மாலையில் எழும்பூர் நீதிமன்றத்தில் கோவன் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை வரும் 20ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். கோர்ட் வளாகத்தில் பேட்டியளித்த கோவன், தம் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுவிலக்கு அமலாகும் வரை போராட்டம் தொடரும் என கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications