தேமுதிக கால் ஊன்றிவிடக் கூடாது என்பதற்காக ராமதாஸ் பிரசாரம் செய்யவில்லை: தமிழருவி
சென்னை: வட மாவட்டங்களில் தேமுதிகவை வளரவே விடக்கூடாது என்பதற்காகத்தான் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிரசாரம் செய்யவில்லை என்று காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் குற்றம்சாட்டியுள்ளார்.
நக்கீரன் வாரம் இருமுறை இதழுக்கு தமிழருவி மணியன் அளித்த பேட்டியில் இதுபற்றி கூறியுள்ளதாவது:

பா.ஜ.க. தலைமையிலான தே.ஜ. கூட்டணி இந்த தேர்தலில் தமிழகத்தில் 19 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இந்த சதவீதம், 25 ஆக உயர்ந்து 15 இடங்களில் வெற்றியும் பெற்றிருக்க முடியும்.
அது நடைபெறாமல் போனதற்கு அடிப்படைக் காரணம், மருத்துவர் ராமதாஸ், விஜயகாந்த் இருவரின் அணுகுமுறைதான்.
விஜயகாந்தின் ஆரம்பகால அரசியல் ஊசலாட்டங்களும் ராமதாசின் பிடிவாதமான புறக்கணிப்பும் மாதக்கணக்கில் தொகுதி உடன்பாடு காண்பதில் கடைப்பிடித்த கேலிக்கூத்துகளும் கூட்டணி தலைவர்கள் ஒருங்கிணைந்து ஒரே மேடையில் கூட வாக்காளர்களை சந்திக்காமல் தவிர்த்ததும் தான் மோடியை மையமாக கொண்டு மக்களிடம் மலர்ந்த ஆதரவை முறியடித்துவிட்டது.
மேலும் பா.ம.க.வும் தே.மு.தி.க.வும் ஒன்றிணைந்து வேலை பார்க்கவில்லை. எந்தச் சூழலிலும் வட தமிழகத்தில் தே.மு.தி.க. வளர்ந்து விடக்கூடாது என்று பா.ம.க.வும், நமது வாக்கு வங்கியால் பா.ம.க. பலம் பெற்றுவிடக்கூடாது என்று தே.மு.தி.க.வும் மறைமுகமாக கத்தி தீட்டியது. அதனால்தான் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் போனது.
கூட்டணியில் இருக்காது பா.ம.க.
வாக்காளர்களுக்கு நன்றி சொன்ன ராமதாஸ், தே.ஜ.கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி என்று சொல்லாமல் பா.ம.க. வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி என்றே சொல்லியிருக்கிறார். இதிலிருந்தே அவரது நிலைப்பாடு என்னவென்று அறிந்துகொள்ள முடிகிறது. அதனால், இந்த கூட்டணி நீடிக்கும் என்பது சந்தேகம்தான்.
மேலும், தே.ஜ.கூட்டணி இந்த இருவர் மூலம் வலிமை பெறும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.
இவ்வாறு தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications