விஜயகாந்த் தலைமையில் கூட்டணி.. பிரேமலதா அழைப்பு குறித்து பரிசீலிப்போம்: தமிழிசை
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் வந்து பேசலாம் என பிரேமலதா அழைப்பு விடுத்துள்ளது குறித்து பரிசீலிப்போம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
தேமுதிகவை பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற செய்ய தீவிரமாக முயற்சித்தது. ஆனால் தேமுதிகவோ தனித்துப் போட்டி- விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி என்று அதிரடியாக அறிவித்திருக்கிறது.

இதனால் திமுகவுக்கான கதவுகளை தேமுதிக சாத்திவிட்டது. அதே நேரத்தில் பிற கட்சிகள் 'வந்து பேசலாம்' என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ஒத்த கருத்துள்ள கட்சிகள் வந்து பேசலாம் என்ற பிரேமலதாவின் அழைப்பை பரிசீலிப்போம்.
பிரேமலதாவின் அழைப்பு குறித்து பாஜகவின் தமிழகம், மத்திய நிர்வாகிகள் விவாதிக்க இருக்கிறோம். எதிர்காலத்தில் தேமுதிகவுடன் இணைந்து செயல்படக் கூடிய வாய்ப்பு கிடைத்தால் அது குறித்து ஆய்வு செய்து முடிவை அறிவிப்போம்.
திராவிட கட்சிகளுக்கு மாற்று நாங்கள்தான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications