For Daily Alerts
Just In
நான் வளர்ச்சியடைந்துள்ளதால் தான் மீம்ஸ் போடுகிறார்கள்: தமிழிசை
மீம்ஸ் போடும் அளவுக்கு நான் வளர்ந்திருக்கிறேன் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
சென்னை: மீம்ஸ் போடும் அளவுக்கு நான் வளர்ந்திருக்கிறேன் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
தமிழிசை எதை சொன்னாலும் அதை கலாய்த்து மீம்ஸ் போடுகின்றனர். அவர் தலைக்கு எண்ணெய் வைக்காததை கூட கிண்டலடிக்கும் அளவுக்கு மீம்ஸ்கள் தெறிக்கின்றன.
இந்நிலையில் இதுகுறித்து சென்னையில் அவர் கூறுகையில், மீம்ஸ் போடும் அளவலுக்கு வளர்ந்திருக்கிறேன். ஊர்பணத்தை சுருட்டியவர்களைகூட மீம்ஸ் போடுபவர்கள் விட்டு விடுகின்றனர், ஆனால் என்னை விடவில்லை.
சுருட்டை முடியை நன்றாக சீவி வருகிறேன், ஆனாலும் வடிவேலுவுடன் இணைத்து மீம்ஸ் போடுகிறார்கள். இதில் என்ன ஒற்றுமை என்றால் எனது வீடும், வடிவேலுவின் வீடும் அருகருகே உள்ளன என்றார் தமிழிசை.
Comments
English summary
Tamilisai Soundararajan says about Memes creators. They leaves even rob the public money, but not leave her.